பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்கிடுக! கடையம் ஒன்றிய மாநாடு கோரிக்கை
தென்காசி, ஜூலை 1- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடையம் வட்டார மாநாடு ஜூன் 30 அன்று முருகன் தலைமையில் அழகப்ப புரத்தில் நடைபெற்றது. மாநாட்டை சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கண்ணன் துவக்கி வைத்து உரை யாற்றினார். சிபிஎம் கடையம் வட்டாரச் செயலாளர் ராம கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். புதிய தலைவராக கிறிஸ்டோபர், செயலாளராக முத்து ராஜன், பொருளாளராக எஸ்.ஆறுமுகம் மற்றும் ஒரு பெண் உட்பட10 நிர்வாக குழு உறுப்பினர்களும் மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் வேளாண் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்லவும் நிலுவையில் உள்ள பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கிட கோரி யும் பிரதம மந்திரி விவசாயிகள் ஊக்கத்தொகையை தடை யின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கிடைத்திட நட வடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.
மருத்துவ மாணவிகள் உள்பட மேலும் 83 பேருக்கு கொரோனா
திருநெல்வேலி, ஜூலை 1 - நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை 52 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப் பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவமனை யில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 70 பேருக்கும், தனி யார் மருத்துவமனையில் 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மருத்துவ மாணவிகள், மருத்துவ கல்லூரி டீன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் ஆகியோர் இதில் அடங்குவர். இவர்கள்அனைவரும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோ னா வார்டில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளது. அரசின் உத்தரவுப்படி பொது இடங்களில் நடமாடும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அபராதம் விதிக்கும் நடைமுறையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அனைத்து பள்ளிகளிலும் மாணவ- மாண விகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி வெள்ளிக் கிழமை நெல்லை மாவட்ட பள்ளிகளில் மாணவ- மாணவி கள் முகக் கவசம் அணிந்து வந்தனர்.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வேகம் அதிகரிப்பு
திருநெல்வேலி, ஜூலை 1- தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. நெல்லை மாநகர பகுதியில் போக்கு வரத்து நெரிசலை சரி செய்வதற்காக அதிக அளவு பேரி கார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களான நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். இந்த ஆண்டு வழக்கம் போல் 2 மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவ காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் புழுதி அதிக அளவில் பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக நெல்லை, தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருவ தால் அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவு பாதிப்படைந்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக அதிக அளவு பேரிகார்டுகள் வைக்கப் பட்டுள்ளன. இந்த பேரிகார்டுகள் காற்றின் வேகம் காரண மாக அடிக்கடி சாலையில் சாய்ந்து விழுந்து விடுகிறது. இத னால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது.
விரைவில் கல்குவாரிகளை திறக்க நடவடிக்கை: அமைச்சர்
திருநெல்வேலி, ஜூலை 1- நெல்லையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெள்ளிக் கிழமை அரிய குளத்தில் உள்ள சாரதா மகளிர் கல்லூரி யில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- முதல்-அமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெருமை அடைகிறேன். தகுதியும் திறமையும் உள்ள அனைவரும் நல்ல நிலையை அடைய முடியும். கல்விக்கு தமிழகம் தான் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி காலத்தில் தான் கல்வித்துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகம்தான் உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு சென்னை உள்பட 3 மாவட்டங்களில் சற்று அதி கரித்துள்ளது. எனினும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்று இவ்வாறு அவர் கூறினார். நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 வாரங்களாக கல் குவாரிகள் மூடப்பட்டு உள்ளன. ஆனாலும் இதுவரை கல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கல்குவாரியை நம்பி ஏராளமான தொழிலா ளர்கள் உள்ளனர் என்பது மறுக்க முடியாதது. விரைவில் அனைத்து குவாரிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் அரசின் ஆய்வில் உள்ளது. விரைவில் குவாரிகள் திறக் கப்படும். 3 சதவீதம் வரையிலான குவாரிகள் சட்டவிரோ தமானவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும். அனைத்து குவாரிகளையும் மூட வேண்டும் என்பது அரசினுடைய நோக்கம் அல்ல என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு புகையிலை பொருள் விற்பனை செய்தவர் கைது
தூத்துக்குடி, ஜூலை 1 குலசேகரபட்டினம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப் பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வை யில் குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகு ராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை காவல்துறையினர் வியாழனன்று (30.06.2022) உடன்குடி கிறிஸ்டியாநகரம் பகுதியில் உள்ள பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் செட்டியாபத்து முத்துகிருஷ்ணாபுரம் பகு தியை சேர்ந்த கருப்பசாமி மகன் சித்திரைசெல்வன் (48) என்பதும் அவர் அங்குள்ள பள்ளி அருகே 18 வயதிற்குட் பட்ட சிறுவர்களுக்கு சரக்கு வாகனத்தில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.40ஆயிரம் மதிப்புள்ள 53 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குலசேகரபட்டினம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகை பறிப்பு
தூத்துக்குடி, ஜூலை 1 தூத்துக்குடி மாவட்டம், சாயர் புரம் அருகே உள்ள புளிய நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணகுமார். வாழைக்காய் வியா பாரி. இவரது மனைவி ரேவதி (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சாயர்புரத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். ரேவதியின் தந்தை கடந்த 25 நாட்க ளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவர் தனது தந்தை வீடு உள்ள புதுக்கோட்டையில் இருந்து தனது மகன்களுக்கு மதிய உணவு எடுத்துச் செல்வார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேவதி மொபட்டில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் அவ ரது கழுத்தில் கிடந்த 7.5 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத் தில் பறித்து சென்று விட்டார். இது குறித்து அவரது கணவர் சரவண குமார் சாயர்புரம் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். போலீசார் சி.சி.டி.வி. காமிரா உதவியின் மூலம் கைது செய்து 7.5 பவுன் தாலி செயின் மீட்கப்பட்டது.
புதிய கிளை அமைப்பு
தென்காசி, ஜூலை 1 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆனந்தபுரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கிளை அமைப்பு கூட்டம் அழகிரி சாமி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கண்ணன், வட்டாரப் பொறுப் பாளர் திருமலை குமார சாமி உட்பட பல விவசாயி கள் கலந்து கொண்டனர். தலைவராக அழகிரிசாமி, செயலாளராக முத்தையா, பொருளாளராக சுடலை குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
குழித்துறையில் ரயில் மோதி வாலிபர் பலி
நாகர்கோவில், ஜூலை. 01 கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்வே நிலையத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரயில்வே துணை ஆய்வாளர் ஜோசப் தலை வனான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி ஆசாரிப் பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர். அவர் வெள்ளை மற்றும் நீலம் கலந்த சட்டையும், ஆப் டவுசரும் அணிந்து இருந்தார்.
மின்தடை அறிவிப்பு
குழித்துறை, ஜூலை 1 குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் புதன்கிழமை (ஜூலை 6) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து குழித்துறை துணை மின் நிலைய அலுவ லகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை துணை மின்நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர் சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் புதன்கிழமை (ஜூலை 6) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநி யோகம் இருக்காது. மேலும் அண்டுகோடு கடமக்கோடு பந்நிப்பாலம் பனவிளை ஆகிய பகுதிகளில் வழக்கம் போல் மின் வினியோ கம் இருக்கும். இந்த நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும் மின் பாதைக ளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.