காரியாபட்டி, டிச.16- விவசாயிகளின் விளை பொருட்களு க்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். உரம், பூச்சி மருந்து, விதைகள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். காரியாபட்டி அரசு மருத்துவமனையில் உடற் கூராய்வு மையம் அமைக்க வேண்டும். சென்னம்பட்டி கால்வாய்க்கு பாசன வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனைப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. காரியாபட்டியில் பி.மலைச்சாமி தலை மையிலும், கல்குறிச்சியில் ஏ.கண்ணன் தலைமையிலும் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துக்குமார், எம்.சுந்தர பாண்டியன், தாலுகா செயலாளர் ஏ. அம்மாசி, கே.ஆறுமுகம், எம்.பரமசிவம், பி.சிவபாக்கியம், எம்.செல்வம், எஸ்.பெத்து, எம்.காசிக்கனி, என்.நல்லு, மகாலிங்கம் ஆகியோர் பேசினர்.