திருநெல்வேலி. மார்ச் 25- பெட்ரோல்,டீசல்,கேஸ் விலை உயர்வை கண்டித்து நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் மேலப்பாளையம் பகுதி செயலாளர் குழந்தைவேலு தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், தாலுகா குழு உறுப்பினர்கள் பேரின்பராஜ்,கருணா இசக்கிமுத்து திராவிட மணி, முருகன் ஈஸ்வரன், சாகுல் அமீது உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் நிறைவுரையாற்றினார்.