திருவள்ளூர், ஜூலை 19- சூப்பர்பில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலை நிறுத்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்துள்ள இருளிப் பட்டில் சூப்பர்பில் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் 120 தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டு களுக்கு மேலாக, மிகவும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை ஆதரித்து பேசிய சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோபால், சூப்பர்பில் தொழிலாளர்க ளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண மாநில அரசு த லையிட வேண்டும், அடுத்த கட்ட போராட்டத்திற்கு தொழிலாளர்கள் செல்வதை தவிர்க்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆதரவு போராட்டத்திற்கு சிபிஎம் பொன்னேரி பகுதி செயலா ளர் எஸ்.இ.சேகர் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட குழு உறுப் பினர்கள் எஸ்.எம்.அனீப், பி.நடேசன், டி.மதன், சோழவரம் ஒன்றிய செயலாள ரும் ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.எல்லையன், சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன், மாவட்ட பொருளாளர் என்.நித்தியானந் தம், மாவட்ட நிர்வாகிகள் எம்.சந்திர சேகரன், ஏ.நடராஜன், அத்திப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் ஆகி யோர் பேசினர். கொட்டும் மழையை யும் பொருட்படுத்தாமல் தொழிலாளர் கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்களின் உறுதிப்பாட்டை வெளிப் படுத்தினர்.