மதுரை, டிச.28- மதுரை ஹார்விபட்டி நடு நிலைப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும். விளையாட்டு மைதானத்தை கையகப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு என். விஜயா தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மதுக்கூர் ராம லிங்கம், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.ராஜ், திருப்ப ரங்குன்றம் தாலுகா செயலாளர் எம்.ஜெயக்குமார் ஆகியோர் பேசினர்.