districts

img

ஆறு மாதங்களில் 6 உயிர்கள் தொடரும் பாதாளச் சாக்கடை மரணங்கள்

மதுரை, நவ.8- மதுரையில் தொடரும் பாதாளச் சாக்கடை மரணங்களில் மாநக ராட்சி அலட்சியம் காட்டுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்  டித்துள்ளது.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாந கர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: மதுரையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி பழங்காநத்தம் எம்ஜிஆர் தெருவில் உள்ள கழிவு நீரேற்றில் இறங்கி வேலை பார்க்கும் போது  மதுரை மாநகராட்சி தொழிலாளி கள் 3 பேர் விஷவாயு தாக்கி பலி யாகினர். இதில், காண்ட்ராக்ட் எடுத்த வி.ஆர்.ஜி. கன்ஸ்ட்ரக்சன் பொறுப்பாளர்கள் மீதோ, மாநக ராட்சி அதிகாரிகள் மீதோ நடவ டிக்கை எடுக்காமல் நிறுவன ஊழி யர்கள் மீது மட்டும் கண்துடைப்  பாக நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. மேலும் மாநகராட்சி நிர்வா கம் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத் தையும் ரத்து செய்யவில்லை.  இதையடுத்து, செப்டம்பர் மாதம் விளாங்குடி ராமமூர்த்தி நக ரில் பாதாளச் சாக்கடை பணியின் போது சேலத்தைச் சேர்ந்த ஒப் பந்த தொழிலாளி சதீஷ் என்பவர் மண் சரிந்து பலியானார். இதில்  சம்பந்தப்பட்ட தனியார் நிறுவ னத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த 2 தனியார் நிறுவ னங்களும் மதுரை மாநகராட்சி பணி களை காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், நவம்பர் 7 அன்று  கூடல்நகர் அருகே உள்ள அசோக்  நகரில் சக்திவேல் என்ற தொழி லாளி உயிரிழந்த சம்பவம் நடந்துள்  ளது. இச்சம்பவத்திற்கு பொறுப் பான சென்னையைச் சேர்ந்த கே.எம். கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்த நிறு வன உரிமையாளர் மற்றும் ஊழி யர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரியவரு கிறது. 

மதுரை மாநகராட்சியில் கடந்த  6 மாதங்களில் 6 உயிர்கள் பாதாளச் சாக்கடை சம்பந்தப்பட்ட பணியில் பலியாகி இருப்பது அதிர்ச்சிய ளிப்பதாக உள்ளது. பாதாளச் சாக்  கடை மரணங்களை தடுப்பதற்கான சிறப்பு சட்டம் 2013ன்படி மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நட வடிக்கைகள் மற்றும் தடுப்பு நட வடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளாதது மற்றும் பணி நடைபெறும் போது கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது கடமைகளையும் சரிவர கடைப்பிடிக்காமல் இருந்துள்ளது இந்த உயிர் பலிகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.  மதுரை மாநகராட்சியில் காண்ட்ராக்ட் எடுத்துள்ள ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்ந்து பாது காப்பு நடவடிக்கைகளை செய்யா மல் மீறி வருவது அப்பட்டமாக தெரிகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரி களின் அலட்சியமும், பொறுப்பற்ற தன்மையும் என எல்லாம் சேர்ந்து அப்பாவித் தொழிலாளர்களின் மர ணத்தில் முடிந்துள்ளது. இப்போக் கினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.  எனவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம் பாதாளச் சாக்கடை பணி களில் இயந்திரங்கள் பயன்படுத்து வதை உறுதி செய்திட வேண்டும். மாநகராட்சி பாதாளச் சாக்கடை பணிகளில் ஈடுபட்டு நிர்வாக தவறு களால் உயிரிழந்த குடும்பத்தின ருக்கு சட்டப்படி வழங்க வேண்  டிய நிவாரண தொகையினை வழங்குவதோடு, உயிரிழந்த தொழி லாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதை உத்தர வாதப்படுத்திட வேண்டும்.  பாதாளச் சாக்கடை அமைப்பு பணிகள் போன்ற மிக முக்கிய பணி களில் ஒப்பந்தம் முறையை கைவிட வேண்டும். ஏற்கெனவே உள்ள பணியாளர்களை நிரந்தரம் செய்தி டவும், பாதாளச் சாக்கடை பணி களை நவீனமயமாக்கிடவும் தமி ழக அரசு முன்வர வேண்டும். தவறி ழைத்த நிறுவனத்தின் ஒப்பந் தத்தை ரத்து செய்வதோடு பொறுப்  பான அதிகாரிகள் மீதும் உரிய நட வடிக்கை எடுத்திட வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறி யுள்ளார்.

கழிவு அகற்றுவது நிரந்தரப் பணி இல்லையா?  சிஐடியு கேள்வி

சிஐடியு மதுரை மாநகர் மாவட்  டச் செயலாளர் இரா.லெனின் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கழிவு அகற்றும் பணியானது நிரந்தர தன்மை கொண்ட பணியா கும். சட்டப்படி இப்பணிகளில் ஒப்  பந்த முறை கூடாது. ஆனால், தமி ழக அரசு இதுபோன்ற பணிகளில் தனியார்மயத்தை அமல்படுத்தி வருகிறது.  மேலும் இதுபோன்ற மர ணங்களை தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் 2013-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை எந்த நிறுவனமும் கடைப்பிடிப்பதில்லை. பாது காப்பு உபகரணங்கள், தடுப்பு நட வடிக்கைகள், கண்காணிப்பு ஏற் பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. தனியார் நிறுவனங்கள் இத்தகைய விதிமுறைகளை பின் பற்றுகின்ற னவா என்பதை கண்காணிப்பதற்கு பொறுப்பான மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளும் கண்காணிப்ப தில்லை.  இவ்வாறு மதுரை மாநகராட்சி யில் பாதாளச் சாக்கடை குழாய்  பதிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் சென்னையைச் சேர்ந்த ஆங்  கர் மற்றும் கே.எம்.கன்ஸ்ட்ரக் சன்ஸ் ஆகிய தனியார் ஒப்பந்த நிறு வனங்களின் ஒப்பந்தத்தையும், விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகக்  காரணமான வி.ஆர்.ஜி. கன்ஸ்ட்ரக்  சன்ஸ் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப் பந்தத்தையும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்  திட வேண்டும்.