districts

img

மதுரை 66, 67 ஆவது வார்டுகளில் குண்டும் குழியுமான சாலைகளால் அவதி

மதுரை, ஜன.29-  மதுரை 66, 67 ஆவது வார்டு களில் குண்டும் குழியுமாக சாலை களை உடனடியாக சீரமைக்க  வேண்டும் சிபிஎம் மற்றும்  பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மெயின் ரோட்டில் இருந்து முடக்கு சாலை வரை  மேம்பால பணி கடந்த ஓராண்டுக் கும் மேலாக நடைபெற்று வரு கிறது. இதனால் வாகனங்கள்  66  ஆவது வார்டு கோச்சடை டோக்  நகர் வழியாக திருப்பி விடப்பட்டுள் ளது. இதனால் இந்த சாலையில்  போக்குவரத்து  அதிகரித்துள்ளது.இதனால் சாலைகள் சேதமடைந் துள்ளன. வீடுகள் முழுவதும் தூசி கள் பரவி சுகாதாரச் சீர்கேடு ஏற் பட்டுள்ளது.   இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேற்கு - 1ஆம்  பகுதிக்குழு செயலாளர் கு.கணே சன் கூறுகையில், இப்பகுதியில் சாலை மோசமாக உள்ளது. இத னால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.  சாலையோரங்களில் ஏற்படும் மணல் குவியலால்  குடி யிருப்புகள் முழுவதும்  தூசி ஆகி விடுகிறது. இதனால் மக்களால் வீடு களை திறந்து வைக்கக்கூட முடிய வில்லை. வாகனங்கள் 24 மணி நேர மும் செல்வதால் வீட்டை விட்டு மக்க ளால் வெளியில் வர முடியவில்லை. சாலையினை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மாமன்ற உறுப்பி னரிடம் கூறியுள்ளோம். அதற்கு அவர், இப்பகுதியில் இரண்டு இடங்  களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்  பட்டுள்ளது. அதை சீரமைத்த  பிறகு தான் சாலை போட முடியும். அதற்கு போக்குவரத்துக் காவல்துறை ஒப்பு தல் அளிக்க மறுக்கின்றது.சாலை யை தோண்டி சீரமைக்க வேண்டும் என்றால் இரண்டு நாட்கள் செல்லும் என்று மாநகராட்சி தரப்பில் கூறப் படுகிறது. காவல்துறையினர் போக்குவரத்தை இரண்டு தினங்க ளுக்கு மாற்றி அமைத்தால் குடிநீர் குழாயை சீரமைத்து சாலை அமைக்க  முடியும். ஏனென்றால் சாலை  அமைப்பதற்கு நிதி  ஒதுக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த போக்கு வரத்து நெருக்கடியினால்தான் சாலை போடப்படுவது தாமதமாகி வருகிறது என மாமன்ற உறுப்பி னர்  கூறியுள்ளார் என்று கணேசன்  தெரிவித்துள்ளார்.

விபத்துப்பகுதியாக மாறிய டோக் நகர்

இப்பகுதியில் உள்ள குடி யிருப்பு வாசிகள் கூறுகையில்,  விரைவில் பாலம் கட்டுமானப் பணி யை முடிக்க வேண்டும். போக்கு வரத்தை மாற்றி சாலையினை சீர மைக்க வேண்டும். ஏனென்றால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்கள் ஏற்படும் இட மாக டோக் நகர் மாறியுள்ளது என்று தெரிவித்தனர்.

குடிநீர் குழாய் உடைப்பு-சாலை நடுவில் மின்கம்பங்கள்

67 ஆவது வார்டு எச்.எம். எஸ்.  காலனியில் பல தெருக்களில் சாலைகள் இன்னும் சீரமைக்கப் படாமல் உள்ளது . எச். எம். எஸ்  காலனியில் இருந்து ராமலிங்கம் கோனார் தெரு செல்லும் இடத்தில்  குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்  ளது. குடிநீர் வரும் நாட்களில் உடைப்பிலிருந்து தண்ணீர் வெளி யேறி தெருக்களில் தேங்கி விடு கிறது. இதனால் இரவு நேரங்களில்  இருசக்கர வாகனத்தில் வரும் நபர் கள் தண்ணீருக்குள் விழுகின்றனர். சாலை நடுவில்  உள்ள மின் விளக்கு களில் வெளிச்சம் குறைவாக உள்  ளது. இந்த மின்கம்பங்களை மாற்றி  அமைத்தால்  சாலை அகலமாகி வாகனங்கள் செல்வதற்கு வசதி யாக இருக்கும். எனவே மாநக ராட்சி நிர்வாகம் இப்பகுதியில் உள்ள செம்பருத்தி நகர், தெரு சாலைகளை உடனடியாக சீர மைக்க வேண்டும். குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், சாலையின் நடு வில் அமைந்துள்ள மின்கம்பங் களை மாற்றி அமைக்க வேண்டும்  என்று குடியிருப்பு வாசிகள் வலி யுறுத்துகின்றனர். விராட்டிபத்து  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் பொது மக்கள்  பயன்பெற தொடங்க இருக்கும் நிலையில் , சுகாதார மையத்திற்கு இடையூறாகவும்  ஆம்புலன்ஸ்  மற்றும் வாகனங்கள் செல்வதற்கு தடையாக பாதையை மறைத்து தனியார் நிறுவனம் மூலம் செயல்  பட்டுக் கொண்டிருக்கும் குடி தண்ணீர் பெட்டியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும்  பொது மக்கள் வலியுறுத்தினர்.