districts

img

இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வல்லுறவு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு விருதுநகரில் சிபிஎம், மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், மார்ச் 23-   விருதுநகரில் இளம் பெண் ஒருவரை மிரட்டி 8 பேர் பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியுள்ள னர். இச்சம்பவத்தைக் கண் டித்தும், பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். குற்றச் செயலில் ஈடுபட்டவர் களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில்  பாண்டியன் நகரில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். துவக்கி வைத்து மாநிலச் செய லாளர் எஸ்.லட்சுமி பேசினார்.  சிபிஎம் மாவட்ட செயலாளர் கே. ஆர்ஜீனன் கண்டன உரையாற்றி னார். மேலும் இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்துக்குமார், நகரச் செயலா ளர் எல்.முருகன், சமூக ஆர்வலர் எம்.ஊர்காவலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சி.பாண்டி யன், எஸ்.தெய்வானை, ஆர்.பாலசுப்பிரமணியன், தமுஎகச மாவட்ட தலைவர் தேனி வசந் தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.