districts

img

கீழவெண்மணி தியாகிகள் 53 ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயிகள், பொதுமக்கள் வீரவணக்கம்

5000 பேரின் பசி தீர்த்த சிபிஎம், சிஐடியு

தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த சுமார் ஐந்தாயிரம் பேருக்கு கட்சியின் கும்பகோணம் பகுதியினர், சிஐடியு, கும்பகோணம் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், விவேகானந்தா சேவா சமிதி உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் தரமான மதிய உணவு வழங்கி பசியை தீர்த்தனர். முன்னதாக சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் துவக்கி வைத்து உணவு குழுவினரை பாராட்டினார்.

அரியலூர், டிச.25 - வர்க்கப் போராட்டத்தில் 44  வெண்மணி தியாகிகள் தீக்கிரையா க்கப்பட்ட நாகை மாவட்டம் வெண்மணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐ டியு மற்றும் பொதுமக்கள் என பல்லாயி ரக்கணக்கானோர் வீரவணக்க அஞ்சலி  செலுத்தினர். வெண்மணி தியாகிகளின் 53 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு  வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.  சிபிஎம் அரியலூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் செங்கொடியினை கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி. துரைசாமி ஏற்றினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் சாந்தனம், ஒன்றிய செயலாளர் அருணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தஞ்சை மாநகரக் குழு சார்பில் நீதி மன்ற சாலையில் நடைபெற்றது. மாநக ரக் குழு உறுப்பினர் ஹெச். அப்துல் நசீர் தலைமை வகித்தார்.  மாநகர செயலா ளர் எம்.வடிவேலன் முன்னிலை வகித் தார். பட்டுக்கோட்டை பேருந்து நிலையம்  எதிரில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட  நிர்வாகக் குழு உறுப்பினர் சி.பக்கிரி சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.தமிழ்ச்செல்வி, எம்.செல்வம், நிர்வாகிகள், சிபிஐ ஒன்றியச்  செயலாளர் காளிதாஸ், நகரச் செயலா ளர் சுதாகர், மாவட்ட துணைச் செயலா ளர் காசிநாதன், மாவட்டக் குழு உறுப்பி னர் கலியபெருமாள், வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பட்டுக்கோட்டை ஒன்றியம் சுக்கிரன் பட்டி - வீரக்குறிச்சியில் நடந்த கொடி யேற்று நிகழ்ச்சிக்கு, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் தலைமை வகித்தார். கு.பாக்கியம் கொடியேற்றி வைத்தார். ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட னர். பட்டுக்கோட்டை ஒன்றியம் கரம்ப யத்தில் ஜீவானந்தம் தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் கொடியேற்றி வைத்தார்

பாபநாசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெண்மணி நினைவுத் தினத்தை  முன்னிட்டு பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்சி கொடி யேற்றி, உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கர் தலைமை வகித்தார். மூத்த தோழர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். பாபநாசம் ஒன்றியச் செயலாளர் காதர்உசேன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். 

குடவாசல்

குடவாசல் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சிபிஎம் குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். லெட்சுமி தலைமை ஏற்று செங்கொ டியை ஏற்றி வைத்தார். மாவட்டக் குழு  உறுப்பினர் எப்.கெரக்கோரியா, தமிழ் நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் டி.ஜி.சேகர் மற்றும் ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் வீரவணக்கம் செலுத்தி னர்.