திருநெல்வேலி, ஜூன் 26- பாளையங்கோட்டை சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர் நல சங்கத்தின் 14வது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாவட்ட தலை வர் சுரேஷ் தலைமை தாங்கினார். முன்ன தாக வைரமுத்து கொடியேற்றினார், கிறிஸ்டோபர் அஞ்சலி தீர்மானம் வாசித்தார் வரவேற்பு குழு தலைவர் முத்து சுப்ரமணியன் வரவேற்று பேசி னார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.சென்பகம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். மாவட்ட பொரு ளாளர் சங்கரநாராயணன் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். கட்டுமான நல சங்க மாநில துணைத் தலைவர் சுப்பையா , ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஆர். முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் நிறைவுரை ஆற்றினார் கூட்டத்தில் கட்டுமான பொருட்க ளின் விலையை கட்டுப்படுத்த வேண் டும், தட்டுப்பாடின்றி கட்டுமான பொருட் கள் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அடைமிதிப்பான் கல்குவாரி விபத்தில் மரணமடைந்த தொழிலாளி களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நலவாரிய ஆன்-லைன் பதிவை எளிமைப்படுத்த வேண் டும், 50 வயது பூர்த்தி அடைந்த பெண் தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும்,நெல்லை மாவட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனு மதி வழங்க வேண்டும் போன்ற தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக ஜான் பாஸ்கர், மாவட்ட செயலாளராக சுரேஷ், மாவட்ட பொருளாளராக முருகன் மற் றும் 7 துணைத் தலைவர்கள், 7 துணைச் செயலாளர்கள் உட்பட 60 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.