districts

img

தடகள போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

நத்தம், ஆக.27- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி யில் இ-குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் கல்லூரி  முதல்வர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.  போட்டியில் 60 பள்ளிகள் கலந்து கொண்டன. இதில்,  156 புள்ளிகள் பெற்று நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி  மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தது.  பெண்களுக்கான போட்டியில் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று  முதலிடம் பிடித்தனர்.  வெற்றி பெற்ற துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை உடற்கல்வி இயக்குநர் சம்சுதீன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்,  சோலைமலை கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர். பின்னர் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.