districts

img

தோழர் கிருஷ்ணன்குட்டி நினைவு தினம்

அருமனை, ஜுன் 27- அருமனை பேரூராட்சி முன்னாள் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவ ருமான   தோழர் கிருஷ்ணன் குட்டியின் 6 ஆவது  நினைவு தினம் குழித்துறையில் திங்களனறு (ஜுன் 27) அனுசரிக்கப்பட்டது. குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் அவரது உரு வப்படத்திற்கு மார்த்தாண் டம் வட்டார குழு சார்பாக  மலர் அஞ்சலி செலுத்தப் பட்டது. வட்டார குழு செயலா ளர் மோகன் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனந்த சேகர், குழித்துறை நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் மோசஸ் சுதீர், குழித்துறை நகர மன்ற  உறுப்பினர்கள் ஜூலியட் மெர்லின் ரூத், சர்தார் ஷா, விஜயலட்சுமி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மூத்த தலைவர் பத்மநாப பிள்ளை, மதன் மோகன் லால் மற்றும் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்