மதுரை, மே 28- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினரும் மேலூர் வட்டார கல்வி அலுவலருமான வெள்ள லூரை சேர்ந்த தோழர் இரா.பாண்டி யன் அவர்களின் நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்ச்சி வெள்ளலூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மேலூர் கிளை சார்பில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிளைத் தலை வர் காளிமுத்து தலைமை வகித்தார். பாண்டியன் ஆசிரியர் மருமகள் பேச்சி யம்மாள் வரவேற்று பேசினார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தோழர் இரா.பாண்டியன் அவர்களின் படத்தினை திறந்து வைத்து நினைவேந் தல் உரையாற்றினார். இந்த நிகழ்வில் கவிஞர் எரியீட்டி, சங்கத்தின் நிர்வாகிகள் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புற நகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா மற்றும் பாண்டியன் ஆசிரியர் குடும் பத்தினர், கிராமமக்கள் பங்கேற்றனர்.