districts

மதுரை முக்கிய செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

சிஐடியு, ஏஐடியுசி சார்பில் இன்று மே தினப் பொதுக்  கூட்டம்: இடம்: மதுரை, ஆரப்பாளையம் கிராஸ்ரோடு, மாலை 5.30 மணி. பங்கேற்பு: மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயன்.

மறவமங்கலம்-சூராணம்  சாலையை சீரமைக்க கோரிக்கை

சிவகங்கை, ஏப்.30- மறவமங்கலம்-சூராணம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சாத்தப்பன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா  மறவமங்கலம் தொடங்கி சூராணம் செல்கிற சாலையின்  இரு பக்கமும் கருவேல் மரங்களும் பெரும் பள்ளங்க ளும் உள்ளன. இதனால் வாகனம் ஓட்டிகள் பள்ளங்களில் விழுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் வலி யுறுத்தியுள்ளார்.

சித்தர்கள் நத்தம் பகுதியில்  மே 3 இல் முழு மின்தடை

சின்னாளப்பட்டி, ஏப்.30-  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின் நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மே 3 ஆம் தேதி  புதன்க்கிழமையன்று நடைபெறுகிறது. இதனால் சித்தர்கள்நத்தம் துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் பகுதிகளான சிலுக்கு வார்பட்டி, சித்தர்கள்நத்தம், சிறுநாயக்கன்பட்டி,நூத்து லாபுரம், அம்மாபட்டி ,மைக்கேல்பாளையம் அணைப்  பட்டி, குண்டலப்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினி யோகம் இருக்காது. எனவே பொதுமக்கள், வணிக நிறு வனங்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு நிலக்  கோட்டை மின்  செயற்பொறியாளர் கருப்பையா  தெரி வித்துள்ளார்.

மதுரை அருகே குடிநீர் கேட்டு  காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

மதுரை, ஏப்.30-  மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் கடந்த பத்து நாட்களாக குடிநீர் வழங்காததை  கண்டித்தும்  குடிநீர் வழங்கக்கோரியும் பெண்கள் உட்பட பொது மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பசும்பொன் நகர். சோலை நகர் உள்ளிட்ட விரி வாக்கப்பட்ட பகுதிகளுக்கு கடந்த பத்து நாட்களாக குடிநீர்  வரவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இது  குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறை யிட்டும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் கோப மடைந்த பொதுமக்கள் காலிக்  குடங்களுடன் சாலை மறி யலில் ஈடுபட்டனர்.  இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதி யில் உள்ள சின்டெக்ஸ் தொட்டிகளை சரி செய்து உட னடியாக குடிநீர் வழங்க வேண்டும்.  இல்லையென்றால் மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்  பெரிய அளவில் மறியலில் ஈடுபட போவதாக தெரி வித்துள்ளனர்.  தகவல் அறிந்து வந்த கவுன்சிலர் சண்முக பாண்டிய ராஜா மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து  தற்காலிகமாக மறியலை கைவிட்டு சென்றனர். மறியல் நடந்த போது பேரூராட்சி அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் கோபம டைந்தனர்.

பைக்கிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

திருவில்லிபுத்தூர், ஏப்.30- விருதுநகர் மாவட்டம்,திருவில்லி புத்தூர் நகர் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்  தவர் மாரிமுத்து .இவர் சனிக்கிழமை அன்று  மாலை காட்டழகர் கோவிலுக்கு செல்வ தாக தனது மனைவி பால அம்பிகாவிடம் சொல்லிவிட்டு தன்னுடைய இருசக்கர வாக னத்தில் சென்றுள்ளார். செண்பகத்தோப்பு செல்லும் வழியில்   நிலைதடுமாறி வண்டியில் இருந்து கீழே  விழுந்துள்ளார் .உடனே அருகில் இருந்த வர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்  திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ மனையில் பரிசோதித்த மருத்துவர் அவர்  இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து மாரிமுத்துவின் மனைவி பால  அம்பிகா கொடுத்த புகாரின் பேரில் திரு வில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை சித்திரை திருவிழாவுக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?

விருதுநகர், ஏப்.30- உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில்,  அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை காண தவிக்கும்  தென்மாவட்ட மக்கள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர்  வலியுறுத்தி வரு கின்றனர். உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த  ஏப்ரல் 23ஆ ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.   மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக குறிப்பிடப்படுவது மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியுமாகும். இந்த விழாக்களை பக்தர்கள் காண்பதற்கு ஏதுவாக   சென்னை-மதுரை, சேலம்-மதுரை, திருவனந்தபுரம்-மதுரை, திருநெல்வேலி, தென்காசி -மதுரை, செங்  கோட்டை- மதுரை, கோவை-மதுரை ஆகிய  வழித்தடங்க ளில்  சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்கிட வேண்டுமென ஏராளமானோர் வலியுறுத்தி  வருகின்றனர்.   ஏற்கனவே கடந்த காலங்களில்  தைப்பூசத் திருவிழா விற்காக பழனிக்கு மதுரை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதேபோல்,   கந்த சஷ்டியையொட்டி திருச்செந்தூர் சூர சம்ஹார நிகழ்வை பக்தர்கள் எளிதில்  சென்று காணும் வகையில்  மதுரையிலிருந்து திருச்செந்தூ ருக்கு  சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டன இதேபோல்,  இராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே, தென்னக ரயில்வே நிர்வாகம், உலகப்புகழ் பெற்ற மிகப் பெரும் திருவிழாவான மதுரை சித்திரைத் திரு விழாவிற்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகை யில் சென்னை, கோவை, செங்கோட்டை,  சேலம், நெல்லை, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூல் வெளியீட்டு விழா

மதுரை, ஏப்.30- மதுரை வாசகர் வட்டம் சார்பில், அல்-அமீன் மேல்  நிலைப்பள்ளியில் நூல் வெளியீட்டு விழா அமைப்பாளர் சண்முகவேலு தலைமையில் நடைபெற்றது.  பரமசிவம் எழுதிய ”செல்லமகன்” – நூலை கவிஞர் மகாலெட்சுமி வெளியிட்டார்.  கவிஞர் சுந்தரபாண்டியன் எழுதிய ”காலக் கவிதகள்” –நூலை ஹைக்கூ கவிஞர் இரா.இரவி வெளியிட்டார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக் நபி மற்றும் பலர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்போர் அறையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு

நடவடிக்கை எடுக்க மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்


திண்டுக்கல், ஏப்.30- திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்போர் அறையை ஆக்கிரமித்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்க  வேண்டும் என்று தமிழ்நாடு  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயந்தி, மாவட்டச் செயலாளர் பகத்சிங் ஆகியோர் விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:  திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இவர்களில் மாற்றுத்  திறனாளிகளும் அடக்கம். இதில் மாற்றுத்  திறனாளிகளின் வசதிக்காக திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் காத்திருப்போர் அறை  கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாக பயன்பாட் டில் உள்ளது.இந்த காத்திருக்கும் அறை யில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை யான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாற்றுத்திறனாளி களுக்கான சங்கம் என்று கூறிக்கொண்டு சில தனி நபர்கள் இந்த காத்திருப்பு அறை யை அபகரித்து தங்களது சங்க அலுவலக மாக மாற்றி வருகிறார்கள். காலை 9 மணிக்கு இந்த காத்திருக்கும் அறைக்கு வரும் நபர்கள் இரவு 9 மணி வரை அங்கே யே தங்கியிருந்து சங்கக்கூட்டம் நடத்து வதும், தங்களது சங்கத்திற்கு ஆள் சேர்ப்ப தற்கும் காத்திருப்போர் அறையை பயன்  படுத்தி வருகிறார்கள். இது அப்பட்டமான விதிமீறலாகும்.  திண்டுக்கல் மாநகராட்சி எந்த நோக்  கத்திற்காக இந்த காத்திருக்கும் அறையை  துவக்கினார்களோ அந்த நோக்கம் நிறை வேறாமல் முழுக்க முழுக்க ஒரு தனியார் மாற்றுத்திறனாளி சங்க அலுவலகமாக மாறுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மாவட்ட ஆட்சிய ரும், மாநகராட்சி அதிகாரிகளும் இவ்விச யத்தில் உடனடியாக தலையிட்டு மாற்றுத்  திறனாளிகள் காத்திருக்கும் ஓய்வறையை சங்க அலுவலகமாக செயல்படுத்தி வரும்  நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அப்புறப்  படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.  திண்டுக்கல் மாமன்றத்தில்  சிபிஎம் கவுன்சிலர் முறையீடு இது தொடர்பாக திண்டுக்கல் மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 2 ஆவது வார்டு உறுப்பினர் கே.எஸ். கணேசன் பேசுகையில்,  திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள  மாற்றுத்திற னாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஓய்வு அறை யை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாநகராட்சியின் கட்டுப் பாட்டில் உள்ள அந்த மாற்றுத்திற னாளிகள் ஓய்வு அறையை தனியார் சிலர்  ஆக்கிரமிப்பதை ஏற்றுக்கொள்ள முடி யாது, எனவே மாற்றுத்திறனாளி பயணி கள் ஓய்வு அறையை முறையாக பராமரிக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களை அங்கி ருந்து அகற்ற வேண்டும் என்று தெரிவித் தார்.                       (ந.நி.)