districts

தேனி அருகே ஆர்எஸ்எஸ் நடத்தும் பயிற்சி முகாமிற்கு அனுமதி இல்லை

தேனி, ஜூலை 26- தேனி அருகே ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும்  பாரதீய பண்பாட்டு சேவா  கேந்திரம் நடத்தும் பயிற்சி முகாம் நிகழ்வுக்கு அனுமதி தர வில்லை.எனவே மாணவர் களுக்கும்,கல்லூரிக்கும் பாது காப்பு கேட்டு கல்லூரி நிர்வாகி  தேனி மாவட்ட காவல் கண்காணிப்  பாளரிடம் புகார் அளித்துள்ளார்.  வீரபாண்டியில் உள்ள தேனி  சௌராஷ்டிரா கலை அறிவியல் கல்லூரியில் அக்னிபாத், அகனிவீர் ஆகிய திட்டங்களுக்கு இலவச பயிற்சி முகாம் நடத்துவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் பாரதீய பண்  பாட்டு சேவா கேந்திரம் என்ற சங்  பரிவார் அமைப்பு மாணவர்கள், வாலிபர்களை திரட்டி முகாம் என்ற  பெயரில் நச்சு விதைகளை விதைத்து வருகிறது.கடந்த 15 ஆம் தேதி கல்லூரியில் வளாகத்திற் குள் பயிற்சி முகாம் நடத்துவதை நிறுத்த கோரி இடதுசாரி மாணவர் - வாலிபர் அமைப்புகள் அந்த கல்  லூரி வளாகத்தின் முன்பு முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்டன.அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.அதனைத் தொட ர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீண்டும் முகாம்  அதே கல்லூரியில் பாரதீய பண்  பாட்டு சேவா கேந்திரம் என்ற சங்  பரிவார் அமைப்பு மீண்டும் அக்னி பாத், அகனிவீர் திட்டத்திற்கு 27 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு இலவச பயிற்சி அளிப்பதாக அறி விப்பு வெளியிட்டது. இதற்கு மாவட்ட  நிர்வாகம் அனுமதி தரவில்லை. இந்நிலையில் திடீர் திருப்பமாக கல்லூரி செயலாளர் ஜெ.கலை வாணி தேனி மாவட்ட காவல் கண் பாணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கல்லூரியில் பயிற்சி முகாம் நடப்ப தாக புரளி உள்ளது.எந்தவித பயிற்சி முகாமிற்கு அனுமதி தர வில்லை எனவே எங்கள் கல்லூ ரிக்கும், மாணவர்களுக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கும் படி அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.