தூத்துக்குடி, ஜூலை 29 தூத்துக்குடியில் கடைகளில் திடீர் ஆய்வு செய்த ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வாழை இலைகளை பயன்படுத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வாழை இலைகளை பயன்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஒவ்வொரு உணவகங்களில் டைபாய்டு ஊசி போட்டவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் செய்தித்தாள் மற்றும் காகிதங்களில் உணவுகளை பொட்டலம் செய்பவர்களை குறித்து மாநில உணவு பாதுகாப்பு அதிகாரி 9444042344, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி 8680800944 ஆகிய எண்களில் புகார் தெரி விக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து வெள்ளியன்று புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் தேநீர் கடைகள்மற்றும் உண வகங்களில் ஆய்வு மேற்கொண்டு உணவு பதார்த்தங்களை செய்தி தாள்களில் வைத்து கொடுக்கக்கூடாது என்று அறிவு ரைகள் கூறியிருக்கிறோம். நிறைய கடைகளில் வாழை இலைகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு வழங்கப்படு கிறது. இன்றைக்கு ஒரு நாள் அனைத்து வியாபாரிக ளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்களே வாழை இலை கொடுக்கிறோம். திண்பண்டங்களில் ஈ, கொசுக்கள் மொய்க்காமல் இருக்க வாழை இலை கொண்டு மூடி வைக்க வேண்டும் என மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வீடு புகுந்து 3 பவுன் நகை, ரூ.50ஆயிரம் பணம் திருட்டு தூத்துக்குடி, ஜூலை 29 நாசரேத் அருகே வீடுபுகுந்து 3 பவுன் நகை மற்றும் ரூ.50ஆயிரம் பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள பாலசுப்பிரமணியபுரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (42), கொத்தனார். இவர் புதனன்று வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் திரும்பியபோது, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.50,000 ரொக்கப் பணத்தை காணவில்லையாம். வீட்டுக் கதவுகள், பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை. வீட்டின் சாவியை வைத்திருந்த இடத்தை அறிந்த மர்ம நபர்கள் வீட்டைத் திறந்து உள்ளே சென்று பீரோவை திறந்து நகையையும் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்று விட்டார்களாம். இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். களக்காடு அருகே மின்னல் தாக்கி பசுமாடு பலி திருநெல்வேலி, ஜூலை 29- திருக்குறுங்குடி அருகே உள்ள செங்குளகுறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 45). தொழிலாளி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். வியாழக்கிழமை மாலை இவர் தனது வீடு அருகே உள்ள வேப்ப மரத்தில் மாடுகளை கட்டி போட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மாடுகள் கட்டி போடப்பட்டிருந்த வேப்பமரத்தில் மின்னல் தாக்கியது. இதில் வேப்பமரம் சேதமடைந்தது. மேலும் மரத்தில் கட்டி போடப்பட்டிருந்த ஒரு பசு மாடும், கோழியும் பலியானது. இறந்த மாட்டின் மதிப்பு ரூ 70 ஆயிரம் ஆகும். மின்னல் தாக்கிய போது, சுந்தரபாண்டி தனது குடும்பத்தினர்களுடன் வெளியே நின்று கொண்டிருந்தார். மின்னல் தாக்கிய போது பயங்கர சத்தத்துடன் அதிர்வும் ஏற்பட்டதால் அவர்கள் வீட்டுக்குள் ஓடி விட்டனர். பலியான பசு மாட்டிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சுந்தரபாண்டி வலியுறுத்தியுள்ளார்.