சிவகங்கை, மார்ச் 1- சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மார்ச் 1 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மது சூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் ,சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், இடையமேலூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் கிரா மச்சந்தை வளாகம் கட்டப்பட்டு வரு வதை பார்வையிட்டு பொதுமக்கள் நாள்தோறும் வந்து பயன்பெறக்கூடிய வகையில் உள்ளதால், போதியளவு உள் கட்டமைப்பு வசதிகளுடன் பணிகளை திட்டமிட்டபடி விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, அதேபகுதி யில் ரூ.5.40 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வரு வதை பார்வையிட்டதுடன், இங்கு பணி யாற்றும் பணியாளர்கள் நல்லமுறையில் பராமரித்து வரவேண்டும். இதன்மூலம் கிராம ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் அளவிற்கு பல்வேறு மரங்களி;ன் மூலம் பலவகையான பயன்கள் கிடைக்கும். எனவே, ஊராட்சிப்பணியாளர்கள் கண்காணித்து பராமரித்திட வேண்டு மென ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெத்தினவேல், அன்புச் செல்வி, உதவிப்பொறியாளர் கார்த்தி யாயினி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.