தூத்துக்குடி, அக்.29- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கே.டி.சி. நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பணிபுரியும் பணியாளர்களின் வருகை பதிவேடுகள் பயோ மெட்ரிக் முறையில் இருப்ப தை பார்வையிட்டார். மேலும் வண்டி எண், தேதி, எத்தனை லிட்டர் டீசல் போட்டது என்ற டீசல் போடுவ தற்கான பதிவேடுகளை ஆய்வு செய்தார். பேருந்து பழுது செய்வதை பார்வையிட்டு பழுது நீக்கும்போது செயல்முறைகளை கேட்டறிந்தார். பணிமனையில் மழைக்காலத்தில் வெள்ள நீர் தேங்கு வதை சரி செய்ய ஊழியர்கள் கோரிக்கை வைத்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்த தாவது: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரத்திற்கு சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நகர் பகுதிக்கு அருகில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்துள்ளோம். திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தெரிவித்தார். ஆய்வில், அரசு போக்குவரத்து மண்டல மேலாளர் ஜி.பழனியப்பன், வட்டாட்சியர் செல்வக்குமார், அலுவ லர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.