மதுரை, மே 10- மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அரசு உதவு பெறும் கல்லூரியில் படிக் கும் மாணவ மாணவிகளிடமிருந்து அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட கூடுத லாக 6 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப் பட்டதாகவும் வசூல் செய்யப்பட்ட பணத்தை கல்லூரியின் பொறுப்பு முதல்வர் என்பவர் வங்கியில் செலுத்தா மல் கையாடல் செய்ததாகவும் கூறப்படு கிறது. கூடுதலாக வசூல் செய்த பணத்தை மாணவ மாணவிகளிடமே திரும்பி வழங்க வேண்டும், கட்டண முறை கேட்டில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை கைது செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து திங்களன்று உள்ளிருப்பு போராட் டத்தை தொடங்கினர். அதனை தொடர்ந்து செவ்வாயன்று இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏரா ளமான மாணவ மாணவிகள், பேராசி ரியர்கள் கலந்து கொண்டு கல்லூரி முதல்வரை கைது செய்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறினர். பின்னர் வந்த மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் மற்றும் அதி காரிகள் மாணவ மாணவிகளிடமும் கல்லூரி முதல்வரிடமும் தனிதனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் மாணவ மாணவிகளிடம் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணத் தொகையை நடப்பு ஆண்டு முடிவடைவதற்குள் திரும்ப வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மாணவ மாணவிகள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர். இதில் கல்லூரி முதல்வர் மீது நட வடிக்கை எடுப்பது குறித்து ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது.