districts

img

விலை வீழ்ச்சியால் நொந்து போன தென்னை விவசாயிகள் போராட்டம்

சின்னாளபட்டி, மே 30-  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அய்யம் பாளையம் சித்தரேவு மருதா நதி அணையைச் சுற்றியுள்ள  பகுதிகளில் தென்னை விவ சாயிகள் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வரு கின்றனர் சுமார் 3,000 ஏக்கர் பரப்பில் தென்னை மரங்கள் நட்டுள்ளனர் இவர்களின் வாழ்வாதாம் தென்னை விவ சாயம் தான். இங்கு விளை யும் தேங்காய்கள் நிலக் கோட்டை, வத்தலக்குண்டு, தேனி திண்டுக்கல் மாவட்  டங்களுக்கும் கேரளா, கர் நாடகா மாநிலங்களுக்கும் செல்கிறது.  தற்போது தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள தால் பாதிக்கப்பட்டுள்ள விவ சாயிகள் தமிழ்நாடு விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலா ளர் பிச்சைமணி தலைமை யில் மாவட்டச் செயலாளர் என். பெருமாள், அய்யம் பாளையம் தென்னை விவ சாயிகள் சங்க நிர்வாகி வெள்  ளைச்சாமி உள்ளிட்ட பலர்  அய்யம்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் தேங்காய் உடைக்கும் போரா ட்டம் நடத்தினர்.  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கொப்பரைத் தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.140 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் பச்சைத் தேங்காய் ஒரு கிலோ ரூ.50 என நிர்ணயம் செய்ய வேண்  டும் தென்னை சார்ந்த தொழில் களான கயிறு, தரைவிரிப்பு தொழிற்சாலைகளை அய்  யம்பாளையத்தில் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி னர்.