மதுரை, மார்ச் 3- தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்கத்தின் மாநில அமைப்புக் குழு கூட்டம் மதுரை யில் நடைபெற்றது. இதற்கு மாநில துணை அமைப்பாளர் எம்.முத்துராம் தலைமை வகித்தார். இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ. விஜயமுருகன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் இளங் கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்கு அரசே முழு தேங்காய்களை கொள் முதல் செய்ய வேண்டும், தென்னை இன்சூரன்ஸ் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து மரங்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டியும் தென்னை மரம் ஏறும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு கேரா சுரக்சா காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய மாவட்டங்களில் சிறப்பு முகாம் மூலம் பதிவு செய்ய வலியுறுத்தியும் ஏப்ரல் மாதம் முழுவதும் தென்னை அதிகள வில் பயிர் செய்யும் 22 மாவட்டங்க ளில் மாவட்ட சிறப்பு மாநாடு களை நடத்துவது, பல்லாயிரக்க ணக்கான விவசாயிகளை திரட்டு வது என முடிவு செய்யப்பட்டுள் ளது.