districts

img

கூடுதல் துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்கக் கோரி சிஐடியு போராட்டம்

விருதுநகர், ஜன.10- விருதுநகர் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த சேமநல நிதி யை வழங்க வேண்டும். நகராட்சி யின் விரிவாக்கத்திற்கு ஏற்ற வகையில் கூடுதலாக துப்புரவுத் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். தற்காலிகத் தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். பேட்டரியால் இயங்கும் குப்பை சேகரிப்பு வண்டிகளை உடனே பழுது நீக்கம் செய்துதர வேண்டும். ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கு பணப் பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் நகராட்சி அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.விஜயபாண்டி, மாவட்டத் தலைவர் எம்.திரு மலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எல். முருகன், மாவட்டப் பொதுச் செய லாளர் ஆர் பாலசுப்பிரமணியன், பழனி, முனியாண்டி, பாண்டி, பாலா உட்பட பலர் பங்கேற்ற னர்.