திருநெல்வேலி, மே 16- பத்தாம் வகுப்பு பொ துத் தேர்வில் அதிக மதிப் பெண் பெற்ற சிஐடியு ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகியின் மகனுக்கு ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர் வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை ஊசி கோபுரம் சிஐடியு ஆட்டோ ஸ்டாண்ட் தலைவரும் மாவட்டக்குழு உறுப்பினரு மான பழனியின் மகன் ஹரி ஹரன் 10 வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வில் 493 மார்க் எடுத்து சாதனை புரிந்துள் ளார். அந்த மாணவன் ஹரி ஹரனை சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட பொ துச் செயலாளர் ஆர்.முரு கன், சிஐடியு அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் காமராஜ், சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் நடராஜன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஸ்டாண்ட் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர்.