districts

img

தொழிலாளர்களுக்கு போனஸ் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருச்சுழி, டிச.30- திருச்சுழி அருகே சூரிய மின் சக்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் சட்டப்படியான சலுகைகள் வழங்கக் கோரி சிஐ டியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சுழி அருகே உள்ளது சாமிநத்தம். இங்கு சூரியஒளி மின்சக்தி நிறுவனம் உள்ளது. இதில், காவலாளிகளாக ஏராள மானோர் பணிபுரிந்து வரு கின்றனர். இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இது குறித்து  பலமுறை நிர்வாகத் திற்கு கடிதம் அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, போனஸ் மற்றும் சட்டப்படியான சலுகைகள் வழங்கக் கோரி வியாழனன்று திருச்சுழி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு சிஐடியு சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு எம்.கோபி தலைமையேற்றார். துவக்கி வைத்து கன்வீனர் எம்.சுரேஷ் குமார் பேசினார். போராட் டத்தை ஆதரித்து விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி. முருகன், சிபிஎம் ஒன்றிய செயலா ளர் மார்கண்டேயன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.ராமர் உரை யாற்றினார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.