தேனி, ஜூலை 26- மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டி நடை பெறவுள்ளதையொட்டி, தேனி-கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கான மெல்லோட்டத் தினை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீ தரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பி யாட் போட்டி 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறவுள் ளதை முன்னிட்டு, செஸ் ஒலிம்பி யாட் 2022 போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்திடும் வகையில், தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பொதுமக் கள் அதிக அளவு கூடும் பகுதி களில் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டும், மாவட்டத்தில் தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்; நடத்தப்பட்டு, விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி திங்க ளன்று மதுரையை வந்தடைந்தது. இப்போட்டிக்கான தேனி மாவட்டத் திற்கான ஜோதியை மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.வீ,முரளீதரன் பெற்றுக்கொண் டார். அதனைத்தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கான மெல் லோட்டத்தின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பன் னாட்டு மற்றும் தேசிய அளவி லான விளையாட்டு வீரர்கள், வீராங் கனைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற னர். இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி மேலோட்டமானது கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலைய வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தினை சென்றடைந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் என். இராமகிருஷ்ணன் அவர்கள் (கம் பம்), ஆ.மகாராஜன் (ஆண்டி பட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.