districts

மதுரை முக்கிய செய்திகள்

காலமானார்

மதுரை, மார்ச் 9-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தைக்கால்  தெரு கிளை மூத்த  கே. ராஜூ (75) கடந்த திங்களன்று  கால மானார் அவரது மறைவு செய்தியறிந்து   மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.விஜயராஜன், துணை மேயர் டி.நாகராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ . கோவிந்தன், இரா.லெலின். ஜா. நரசிம்மன், வை.ஸ்டாலின், மாமன்ற உறுப்பி னர் டி.குமரவேல், பகுதிக்குழுச் செயலாளர் பி.ஜீவா, மாவட்டக்குழு உறுப்பினர்  பி.கோபிநாத் மற்றும் பகு திக்குழு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மரத்தடியில் பட்டாசு தயாரித்த நான்கு பேர் மீது வழக்கு

சிவகாசி, மார்ச் 9- சிவகாசி அருகே உள்ளது நெடுங்குளம். இங்கு தனி யாருக்குச் சொந்தமான தெய்வம் பட்டாசு ஆலை உள்ளது.  இந்த நிலையில், அப்பகுதியில் எம்.புதுப்பட்டி காவல்துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது, மரத்தடியில் பாதுகாப்பற்ற நிலையில் அங்கு தொழி லாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.  இதையடுத்து, ஆலை உரிமையாளர் கணேசன், போர்மென் இளங்கோவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல் திருத்தங்கல் ஸ்பார்க் கலர்ஸ் மத்தாப்பு  ஆலையில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடச் செய்த கணேசன், திருப்பதி ஆகியோர் மீதும் திருத்தங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சாலை விபத்தில் ஒருவர் பலி

திருவில்லிபுத்தூர், மார்ச் 9- திருவில்லிபுத்தூர் வடக்கு மலையடிபட்டியைச் சேர்ந்த பொன்மாரி, நல்ல குற்றாலம் தெரு பகுதி யைச் சேர்ந்த கோடேஸ்வரி ஆகிய இருவரும் கோவில்  திருவிழாவிற்கு வந்து விட்டு இரு சக்கர வாகனத்தில்  இராஜபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்த கார் இரு சக்கர வாகனத்தில் மோதி யது.  இதில் வடக்கு மலையடிபட்டியை சேர்ந்த பொன்மாரி  திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோடேஸ்வரி  மதுரை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வன்னி யம்பட்டி காவல்துறையினர் விசாரித்தனர்.

காவல் நிலையத்தில் நிறுத்தி  வைக்கப்பட்ட வாகனங்கள்... 

சின்னாளபட்டி, மார்ச் 9- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலை யத்தில் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்களை நிறுத்தி வைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. வியாழ னன்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 50- க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகின. தீவிபத்து நடந்த  இடத்தின் அருகில் கல்விக் கூடங்கள் மருத்துவமனைகள் வீடுகள் இருக்கின்றன. குற்ற வழக்குகளில் சம் பந்தப்பட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு தகுந்த இடவசதி கள் ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பெண்கள், குழந்தைகள் கைது

விருதுநகர், மார்ச்9- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், வாகைக்குளம் கிராமத்தில் அரசு மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கை: திருச்சுழி அருகே உள்ளது வாகைக்குளம் கிராமம். இங்கு தனியார் பார் நடத்துவதற்கு வசதியாக அரசு மதுபானக் கடை திறக்க கடந்த எட்டு மாதங்களாக முயற்சி நடைபெற்று வந்தது. இங்கு மதுக்கடை வந்தால், சாதிய மோதல் நடைபெற வாய்ப்புள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் சீரழியும். பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என அரசு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.  மதுக்கடை திறக்கக் கூடாது என அப்பகுதி பொதுமக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுநாள் வரை வட்டாட்சியர், கோட்டாட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் என அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொருமுறையும் திறக்கப்படாது என்ற வாக்குறுதியளித்தனர்.  இந்த நிலையில், வியாழனன்று வாகைக்குளம் கிராமத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி தனியாருக்கு ஆதரவாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி, மாவட்டத் தலைவர் எஸ்.தெய்வானை, மாவட்டச் செயலாளர் என்.உமாமகேஸ்வரி, கட்சியின் ஒன்றியச் செயலாளர் மார்கண்டேயன் மற்றும் பெண்கள், குழந்தைகள் என 60 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மக்களின் கடும் எதிர்ப்பை மீறி  தனியார் பார் நடத்துவதற்கு உடந்ததையாக செயல்படும் டாஸ்மாக் மேலாளரின் செயல்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.

வருவாய்த்துறை  ஊழியர்கள் போராட்டம்

நத்தம், மார்ச் 9- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாட்சியர் அலுவல கத்தில் வருவாய்துறை அதிகாரிகளின் தங்களது வாழ்வா தார கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மணி நேரம் பணி  புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில்  நடைபெற்ற போராட்டத்தில் துணை வட்டாட்சியர் ருக்கு மணி, வருவாய்ஆய்வாளர் டில்லிபாபு, வட்டத் தலைவர்  பச்சைமுத்து. சண்முக பிரியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மார்ச் 15 முதல் தேனியில்  இலவச தையல் பயிற்சி தொடக்கம்

தேனி, மார்ச் 9- தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்புப் பயிற்சி  நிலையத்தில் மார்ச் 15-ஆம் தேதி முதல் பெண்களுக்கு இல வச தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 வயது நிரம்பிய கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்  கலாம். தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி  வரை 30நாட்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி யுடன் உணவும் இலவசம். தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ், தொழில் தொடங்க வங்கிக்கடன் ஆலோசனை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 80723 34369, 95003 14193 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று நிலைய இயக்கு நர் எம்.தனசேகரப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத  பட்ஜெட்டை அம்பலப்படுத்திய விவசாயிகள்

சின்னாளபட்டி, மார்ச் 9- ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை அம்பலப்  படுத்தியும், ஏப்ரல் 5-ஆம் தேதி விவசாயிகள் சங்கம், விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் நாடாளுமன்றம் நோக்கி நடத்த உள்ள பேரணியின் நோக்கத்தை விளக்கியும் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. பட்டிவீரன்பட்டியில் நடைபெற்ற பரப்புரையில் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் அழகர்சாமி, குண சேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வத்தல குண்டு ஒன்றியச் செயலாளர் தேவேந்திரன், சிங்காரக் கோட்டையில் விவசாயிகள் சங்க ஆத்தூர் ஒன்றியத் தலைவர் பாண்டியராஜன், சின்னாளபட்டியில் ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பால்ராஜ் சிஐடியு ஒன்றி யக் கன்வீனர் வி.கே.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் ஒன்றியச் செயலாளர் சூசைமேரி, பாலமுருகன், சௌந்தரபாண்டியன், நிலக்கோட்டையில் சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் சாதிக் அலி, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பாலசுப்பிரமணியன், விவசாயத்  தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் ரவி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

வைகை அணை பூங்காவை தூய்மை செய்த மாணவர்கள்

தேனி, மார்ச் 9- தேனி மாவட்டம் சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஒருநாள் களப்  பயணமாக வைகைஅணைக்கு வந்தனர். அங்குள்ள பூங்காவில் நெகிழி மற்றும் மக்காத குப்பைகளை  அகற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இளஞ்செஞ்சிலுவைச் சங்க ஆலோசகர் அருளப்ப செல்வராஜ், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அருள்மொழிதேவி, சாரண,சாரணியர் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காந்திகிராம பல்கலையில்   நிறமாலையியல் பயிலரங்கு

சின்னாளபட்டி, மார்ச் 9- காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள  வேதியியல் துறை, தேசிய அளவிலான “அணுக்கரு காந்த ஒத்திசைவு  நிறமாலையியல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப் பயிலரங்கு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட வர்கள் பயிலரங்கில் பங்கேற்றனர்.  மாணவர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் (கூடுதல் பொறுப்பு) பேரா.குர்மீத்சிங், “வேதியியல் தவிர பிற துறைகளான மூலக்  கூறு வடிவமைத்தல், மருந்து செயல்பாடு, நோய் கண்டறிதல் மற்றும்  வேளாண்மை துறைகளில் அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலை மானியின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.  ஆராய்ச்சிப்பணி யில் பெரும்பங்கு வகிப்பதற்காகவும் தரமான ஆராய்ச்சி கட்டுரை களை வெளியிட்டதற்காகவும் வேதியியல் துறை பேராசியர்களை அவர்  பாராட்டினார்”. சிறப்பு விருந்தினராக   பெங்களூரு ஐஐஎஸ்சி பேரா.என்.சூர்யப்ரகாஷ் பங்கேற்றுப் பேசினார்.

கழிவறையை சுத்தம் செய்ய வலியுறுத்திய ஆசிரியர்கள்

திருவில்லிபுத்தூர், மார்ச் 9- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யக்கூறிய ஆசிரியர்களைக் கண்டித்து வியாழனன்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.  இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:- பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை 86 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  ஆசிரியர்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டு, டீ கிளாஸ் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டுமென கட்டாயப் படுத்துகின்றனர். அவ்வாறு செய்யாத மாணவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளனர். செய்ய மறுத்த  8-ஆம் வகுப்பு மாணவியை முட்டி போடச்சொல்லி தண்டனை அளித்துள்ளனர் என்றனர்.   தகவலறிந்து வந்த திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ரெங்கசாமி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றனர்.

பொதுப் பாதையை ஆக்கிரமித்து தனியார் திருமண மண்டபம் 

சிவகாசி, மார்ச்.9- விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், திருத்தங்கல் கே.கே.நகர் பகுதியில்  மக்கள் பயன்படுத்தி வரும் பொது  வண்டிப் பாதையை ஆக்கிரமித்து தனியார் திருமண மண்ட பம் கட்டியதை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிர மணியன் புகாரளித்துள்ளார்.  அவர் தமது புகாரில், திருத்தங்கல், கே.கே.நகர், சத்யா  நகர் ஆகிய பகுதியில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் வசித்து வருகின்றனர். அதில் பிரதான சாலையின் மேற்கு  பகுதியில் புல எண் 1306,1307 உள்ளன. அதில் சர்வே எண்  1306-1ல் சாட்சியாபுரம் சாலை தொடங்குகிறது. அதில் உள்ள வண்டிப்பாதையை ஆக்கிரமித்து தனியார் திருமண  மண்டபம் கடந்த பத்துவருடங்களுக்கு முன் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அவ்வழியே மக்களை செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர். அரசு ஆவணப்படி, மக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் திருமண மண்டபத்தை அகற்றி,  அங்கு தார் சாலை- மின் விளக்கு வதி செய்து தர வேண்டு மெனத் தெரிவித்துள்ளார்.

தொண்டி முஸ்லிம் ஜமாத் தலைவரை பதவி நீக்கக்கோரும் மனு முடித்து வைப்பு

மதுரை, மார்ச் 9- இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வடக்குத் தெரு  முஸ்லிம் ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல்லா உயர்நீதி மன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனுவில், “ தொண்டி வடக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் கடந்த 2021- ஆம் ஆண்டு வக்புவாரியத்  தேர்தலில் மூலம் தேர்வு செய்யப் பட்டு 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அவர்க ளில் சாகுல் ஹமீது என்பவர் தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்டார். இந்த நிலையில் ஜமாத் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவது மட்டுமல்லாமல் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கென ரூ.5 லட்சம் வசூல் செய்துள்ளார். அதை கட்டு மானப் பணிகளுக்குச் செலவிடாமல் அதை முறை கேடாகப் பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது முறையான கணக்கு காண்பிக்கவில்லை எனவே ஜமாத் மக்கள் மற்றும் ஜமாத் கமிட்டி அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து  தலைவராக உள்ள ஷாகுல் அமீதை தலைவர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வக்பு வாரியத் தலைவர் மற்றும் வக்பு  வாரிய முதன்மைச் செயலாளருக்கு தீர்மானம் அனுப்பப் பட்டுள்ளது ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ஜமாத் தலைவராக உள்ள சாகுல்அமீத் -தை நீக்க வேண்டும் அல்லது இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆஷா முன்பு வியாழனன்று  விசா ரணைக்கு வந்தது மனுதாரர் தரப்பில் ஜமாத் தலைவர் பணம் கையாடல் செய்ததற்கான ஆவணங்கள் தாக்கல்  செய்யப்பட்டது. மேலும் தலைவர் பதவியில் இவர் தொடர தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஜமாத் கமிட்டி உறுப்பினர்கள் புதிதாக வக்பு வாரிய முதன்மைச் செயலருக்கு  மனு அளிக்க வேண்டும் அந்த  மனுவின் அடிப்படையில் ஜமாத் தலைவராக சாகுல் ஹமீத் செயல்பட வக்பு வாரிய கமிட்டி தடை விதிப்பது குறித்து உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்  என  உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

நீட் விண்ணப்பக் கட்டணம் அதிகரிப்பு ஜிஎஸ்டியும் கட்டாயம்

பழநி, மார்ச் 9- நீட்தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 அதி கரிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வலியுறுத்தியுள்ளது. அமைப்பின் நிர்வாகி ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இளங்கலை மருத்துவ படிப்பு களான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி நர்சிங் படிப்பு களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கபட்டுள்ள நிலையில் தேர்வுக்கான கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் அதிக ரிக்கப்படுகிறது. பொதுப் பிரிவினர் ரூ.1700, ஓ.பி.சி பிரிவினர் ரூ.1,600, பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ரூ.1,000  செலுத்த வேண்டும். இந்த ஆண்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியும் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.   நீட் தேர்வு கட்டண உயர்வை தேசிய தேர்வு முகமை கைவிட வேண்டும். கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து விண்ணப்பங்களை இலவசமாக வழங்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை தேர்வு முகமையே ஏற்க முன் வரவேண்டும். இதற்கு கல்வித் துறை நிதி  ஒதுக்க முன்வரவேண்டுமென செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.