districts

விருதுநகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளருக்கு தீண்டாமை வன்கொடுமை

விருதுநகர், மே 28- விருதுநகர் பொதுப்பணித்துறை அலுவ லகத்தில் பணிபுரிந்து வரும் உதவியாள ருக்கு தொடர்ந்து தீண்டாமை வன் கொடுமை புரிந்ததாக கணக்கு அதிகாரி, சூப்பிரண்டு உட்பட 6 பேர் மீது காவல்  துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விருதுநகர் - மதுரை சாலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவியாள ராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன்(48). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அதே அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணி புரிந்து வருபவர் இளங்கோவன். இவர்,  மாரியப்பன் தண்ணீர் குடிக்கச் சென்ற  போது, சாதியைச் சொல்லித் திட்டிய தோடு குவளையை பறித்துக் கொண்டதாக  கூறப்படுகிறது. மேலும், அங்கு பணிபுரியும் கதிரேசன் என்பவர் மூலம் தேநீரில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விடுவதாக வும், சைகை மூலம் கொலை செய்து விடுவ தாகவும் மிரட்டினாராம். மேலும், சூப்பிரண்டு இளங்கோவனின் தூண்டுதலின் பேரில் அங்கு பணிபுரிந்து வரும் கணேஷ்முனியராஜ் மற்றும் ராஜேஸ் ஆகியோர், மாரியப்பன் இயற்கை உபா தையை கழிக்கச் செல்ல முடியாதபடி கழி வறையை பூட்டிக் கொண்டதோடு, பட்டியல் இனத்தவர் இந்தக் கழிப்பறையை பயன் படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் உனது சிறுநீர் குழாயை அறுத்து வீடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும்,அதே அலுவலகத்தில் பணி யாற்றும் முத்துமுருகானந்தம் என்பவர்  மாரியப்பனை அலுவலகக் கணிப்பொறி யை பயன்படுத்த விடாமல் தடுத்ததோடு, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் தொடும் கணிப்பொறியை நாங்கள் எப்படி தொடு வது என கூறினாராம். மேலும், கணக்கு அதிகாரியான தர்  மேந்திரா யாதவ் என்பவர், ஹிந்தியில் சாதி யைச் சொல்லி திட்டியதோடு, உத்திரப்பிர தேசமா இருந்தா, உன்னைப் போன்றவர் களை வேலைக்கு வைத்திருக்க மாட்டோம்.  அடித்து விரட்டிவிடுவோம். வேணும்னா வீடி யோவைப் பார்க்கிறாயா? என அவர் மிரட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த உதவி யாளர் மாரியப்பன் இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு  அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்  திய போலீசார் பொதுப்பணித்துறை கணக்கு அதிகாரி, சூப்பிரண்டு உட்பட 6 பேர்  மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.