districts

img

மகளிருக்கான தொழில் மேம்பாட்டு பயிற்சி

சிவகங்கை, மார்ச் 24- சிவகங்கையில் மகளிர் குழு பெண் தொழில் முனைவோர்களுக்கான தொழில் மேம்பாட்டு   பயிற்சி   இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா பொது மேலாளர்  ஜோசப் ராஜ் தலைமை வகித்தார்.  தலைமை அலுவலக பயிற்சி யாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்துகொண்ட தொழில்முனைவோருக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன பொது  மேலாளர் ஜோசப் ராஜ், அரசு கால்நடை மருத்துவர் மோகன்தாஸ் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.