மருந்துக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
தூத்துக்குடி, டிச.27- தூத்துக்குடியில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ.20ஆயிரம் பணம் மற்றும் பொருட்கள் திருட்டுப் போய்விட்டது. தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் மகன் சாகுல் ஹமீது (45), இவர் அப்பகுதியில் மருந்துக் கடை (மெடிக்கல்) நடத்தி வருகிறார். திங்கள் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். செவ்வாயன்று காலை 6 மணிக்கு கடையை திறக்க வந்தபோது, கடையில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.20ஆயிரம் பணம், ரூ 2ஆயிரம் மதிப்புள்ள மாத்தி ரைகள் திருடு போயிருந்தன. இது குறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் சாகுல் ஹமீது புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஐயப்பன், துணை காவல் ஆய்வாளர் முருக பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வந்து அங்கு பதிந்துள்ள கைரேகைகளை சேக ரித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து, கடையின் பூட்டை உடைத்து திருடியவர்களை தேடி வருகின்றனர்.
ரூ.1லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் :4 பேர் கைது
தூத்துக்குடி, டிச. 27 ஆத்தூர் அருகே குடோனில் பதுக்கிய ரூ.1லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது தெற்கு ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடோன் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர் களை பிடித்து விசாரணை செய்தனர்.. இதில் அவர்கள் கொற்கை மணலூர் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன்களான ஜெய முருகன் (41), மாரிமுத்து (39), பொன்ராஜ் (35) மற்றும் ஏரல் முதலியார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசன் (46) ஆகியோர் என்பதும் அவர்கள் மேற்படி குடோனில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தி ருந்ததும் தெரியவந்தது. உடனே தனிப்படை அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.1,08,200 மதிப்புள்ள 61 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.53,200 ஆகியவற்றை பறிமுதல் செய்தது. இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
24 பனை மரங்கள் வெட்டிச் சாய்ப்பு
தூத்துக்குடி, டிச.27- பேய்க்குளம் அருகே 24 பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் இருந்து கட்டாரிமங்கலம் செல்லும் சாலையோரமுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. பனை மரங்களை வெட்ட அரசு தடை விதித்துள்ள நிலையில், அதில் உள்ள பனை மரங்களை திங்கள் காலை தொழிலா ளிகள் வெட்டியுள்ளனர். இதை பார்த்த பனைத் தொழிலா ளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அவர்கள் உரிய அனுமதி பெற்று வெட்டப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்குள்ளவர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல றிந்து அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசார ணையில் இந்த இடத்தில் தனியார் சோலார் அமைக்க இடம் வாங்கியுள்ளதாகவும், அவர்கள் பனை மரங் களை வெட்ட கூறியதன் பேரில் வெட்டப்பட்டதும் தெரிய வந்தது. இதில் மொத்தம் 24 பனை மரங்கள் வெட்டப் பட்டுள்ளதாகவும், வெட்ட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என விசாரிக்க இடம் வாங்கிய தனியார் கம்பெனிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறை யினர் தெரிவித்தனர்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு 6 லட்சத்தை தாண்டியது
திருநெல்வேலி, டிச. 27- நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வீட்டு மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 10,57,163 , கைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 862, விசைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 2090, விவசாய மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 89480, குடிசை மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 7867 என மொத்தம் 11,57,465 உள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை வரை சிறப்பு முகாம்கள் மூலமாகவும், இணைய வழி மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 6,02,689 ஆகும். இது சுமார் 52.05 சதவீதம். வருகிற 31-ஆம் தேதிக்குள் 100 சதவீதம் ஆதார் இணைக்க அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து பழைய பேட்டை பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை உதவி மின் பொறியாளர் அருணன் ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டத்தில் மழை விவரம்
தென்காசி, டிச. 27 தென்காசி மாவட்டத்தில் செவ்வாய் காலை 6 மணி நிலவரப்படி 217.90 மிமீ மொத்தமழை அளவு பதிவா கியுள்ளது .இதில் கடைய நல்லூர் 27 மில்லி மீட்டர், சங்கரன்கோவில் 5 மில்லி மீட்டர், செங்கோட்டை 24.80 மில்லி மீட்டர், சிவகிரி 14 மில்லி மீட்டர் ,தென்காசி 30 மில்லி மீட்டர், கடனாநதி அணை 30 மில்லி மீட்டர், ராமநதி அணை 39.20 மில்லி மீட்டர், கருப்பாநதி அணை 23.80 மில்லி மீட்டர், குண்டாறு அணை 22.40 மில்லி மீட்டர் ,அடவி நைனார் அணை 2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவா கியுள்ளது. அதிகபட்சமாக தென்காசியில் 30 மில்லி மீட்டர் ,ராமநதி டேம் பகுதி யில் 39.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி யுள்ளது.
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை கால பயிற்சி முகாம்
திருநெல்வேலி, டிச. 27- பள்ளி மாணவ மாண வர்கள் தங்களின் விடுமுறை காலத்தினை பயனுள்ள வகையில் கழிக்கும் வித மாக நெல்லை அரசு அருங் காட்சியகமும் என் பி என் கே கலை பண்பாடு மன்றமும் இணைந்து ஒருங்கிணை க்கும் பயிற்சி முகாம் அருங் காட்சியகத்தில் துவங்கப் பட்டது. இப்பயிற்சியினை துவங்கி வைத்த நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ .சத்தியவள்ளி மாணவர்கள் விடுமுறை காலத்தினை செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் செல விடாமல் அருங்காட்சிய கத்தில் நடைபெறும் இப் பயிற்சியின் மூலமாக தங்க ளின் ஓவியம் மற்றும் கலைத் திறனை வளர்த்துக் கொள்ள லாம் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியினை மாஸ்டர் ந. பிரபு நடத்தினார். அவர் மாண வர்களுக்கு களிமண்ணில் பொம்மைகள் செய்யும் பயிற்சியினை நடத்தினார். ஏராளமான மாணவ மாண விகள் ஆர்வத்துடன் இப் பயிற்சியில் கலந்து கொண்டு களிமண்ணில் பொம்மை கள் செய்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை என்பிஎன் கே கலை பண்பாடு மன்றத்தின் ஒருங் கிணைப்பாளர் மூ.வெ.ரா.செய்தார். தொடர்ந்து புதன்கிழமை அக்ரலிக் ஓவியப் பயிற்சி நடைபெற உள்ளது என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித் துள்ளார்.
காலமானார்
மதுரை, டிச.27- மதுரை விளாங்குடியைச் சேர்ந்த சகர் பானு காலமா னார். மதிமுக தொழிலாளர் முன்னணி மாநில இணைப் பொதுச் செயலாளர் மகபூப்ஜான் அவர்களின் துணைவி யார் சகர் பானு (67) உடல்நலக்குறைவு காரணமாக திங்க ளன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், துணை மேயர் டி.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், அ. ரமேஷ், ஜெ.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராதா, பி.கோபிநாத், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுமேலாளர் என்.பாண்டி, பொறுப்பாசிரியர் எஸ்.பி. ராஜேந்திரான், மதுரை பதிப்பு மேலாளர் ஜோ.ராஜ் மோகன் மற்றும் சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் விளாங்குடியில் உள்ள அன்னாரது இல்லத்திற்குச் சென்று சகர் பானு உட லுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்க ளன்று மாலை நடைபெற்றது.
கொரோனா பரவல் ஒத்திகை நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் 160 படுக்கைகள் தயார்
திருநெல்வேலி, டிச. 27- சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.7 என்ற பெயரில் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டு உள்ளது. கொரோனாவால் ஏற்படும் எத்தகைய நெருக்கடி களையும் எதிர்கொள்ள சிறப்பாக தயாராகும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு அறி வுறுத்தி இருக்கிறது. அதன்படி தமிழகத்திலும் ஒத்திகை நடை பெற்று வருகிறது. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் நடைபெற்று வரும் ஒத்திகை பயிற்சிகளை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்து வர்கள் கூறுகையில், கடந்த முறை கொரோனா தொற்று பரவலின் போது அதற்கென ஒதுக்கப்பட்ட வார்டுகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. சுமார் 160 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. இதில் 20 படுக்கை கள் ஐ.சி.யூ. பிரிவுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர 2 ஆக்சிஜன் பிளான்டுகளும் ஏற்கனவே தயார் படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து படுகை களுக்கும் ஆக்சிஜன் இணைப்புகளும் தயாராகவே உள்ளது. கொரோனா பரவலையொட்டி தற்போது இந்த வார்டுகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 300 நோயாளிகள் வரை சிகிச்சை பெறுவ தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,100 படுக்கைகள் உள்ளன. கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் வந்தா ல் சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் உள்ளோம் என்றனர்.
போலி ஆவணத்தால் விற்பனையான ரூ.36 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
திருநெல்வேலி, டிச .27- பாளை கே.டி.சி.நகர் பிருந்தாவன்நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது. போலி ஆவணம் தயார் செய்து வேறொருவருக்கு இடம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஜுடிக்கு தெரிய வரவே, அவர் தனது நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட எஸ் பி சரவணனிடம் மனு அளித்தார். இதுதொடர்பாக மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப்பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் நிலமானது போலி ஆவணம் மூலம் வேறு நபருக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து நடத்தி வரும் நில அபகரிப்பு தொடர்பான முகாமில் நில உரிமையாளர் ஜுடி மற்றும் எதிர் மனு தாரர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டு, துணை கலெக்டர் தமிழரசி, தாசில்தார் பகவதிபெருமாள் ஆகியோர் முயற்சி யால் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அது போலி ஆவணம் என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஜுடியிடம் நிலத்தை ஒப்ப டைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரண மாக இருந்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதே போல் நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் வேப்பங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு தளபதி சமுத்திரம் பகுதியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஒலி ஆவணம் மூலம் மற்றொரு நபர் பத்திர பதிவு செய்திருப்பதை அறிந்த சுப்பையா தனது நிலத்தை மீட்டு தருமாறு நெல்லை மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி புகார் அளித்து இருந்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ் பி சரவணன் உத்தரவிட்டார். அதன் பேரில் டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ் மேற்பார்வையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மீரால் பானு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி தலைமையிலான போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை நில உரிமையாளர் சுப்பையாவிடம் வழங்கினர்.
மனைவி, குழந்தை கொலை: இரட்டை ஆயுள் தண்டனை
தென்காசி ,டிச. 27 தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட தளவாய்புரம் பகு தியில் வசித்து வந்த வெங்க டேசன் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை யை கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக் கப்பட்டார். திங்களன்று இவ்வழக்கில் விசாரணை மேற்கொண்ட திருநெல் வேலி மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளியான வெங்கடேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கடைகளில் பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி
மதுரை, டிச.27- மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்று பேருந்து நிலையங்களில் உள்ள கடை களில் கோடிக்கணக்கில் வரி பாக்கி உள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மாட்டுத்தாவணி பகுதியில் எம்ஜிஆர் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு மதுரை மாநகராட்சிக்கு சொந்த மான 277 கடைகள் செயல்படுகிறது, 277 கடைகளின் உரிமையாளர்கள் சுமார் ஒரு கோடியே 69 லட்சத்து 87 ஆயிரத்து 370 ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாகவும், அதில் குறிப்பாக அரசு நிறுவனங்களான தமிழ்நாடு போக்குவரத்து அலுவலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி களும் தங்களுடைய ஏடிஎம் மையங்க ளுக்கு வரி பாக்கி செலுத்தாமல் இருப்ப தும் தெரியவந்துள்ளது, மதுரை மாநகராட்சி பேருந்து நிலை யங்களில் செயல்படும் கடை உரிமையா ளர்கள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளதும் தெரியவந்துள் ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்று பேருந்து நிலையங்களில் ஒரே நபருக்கு மூன்று முதல் நான்கு கடைகள் வாடகைக்கு வழங்கியுள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள் ளது.
ஜன.12-இல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
விருதுநகர், டிச.27- விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க் காவல் படைக்கு வரும் ஜனவரி.12-ஆம் தேதி ஆட்கள் தேர்வு செய்யப் பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருது நகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடத் திற்கு சேவை செய்ய, தன்னார்வ மனப் பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி (வியாழக் கிழமை) காலை 8 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற உள்ளது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.
‘பைக்’ ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
துணை காவல் ஆணையர்
திருநெல்வேலி, டிச .27- நெல்லை வண்ணார் பேட்டை பகுதி யில் மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வரும் வாகனங்களில் அரசு விதிமுறைகள்படி நம்பர் பிளேட்டுகள் முறையாக வைக்கப் பட்டுள்ளதா?, அரசு விதிமுறைகள் படி வாகனங்கள் பயன்படுத்தப் படுகிறதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்த னர். அப்போது முறையாக நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டுகளில் நம்பரை எழுதாமல் பெயர்கள் எழுதப் பட்டிருந்த வாகனங்களை காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்த னர். இதேபோல் ஏர்- ஹாரன் உள்ளிட்ட வைகளை பயன்படுத்திய வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களாக இதே போல் நடை பெற்று வரும் வாகன தணிக்கையில் நம்பர் பிளேட் முறையாக வைக்கப்படாத 250 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள தாக போலீசார் தெரிவித்தனர். துணை கமிஷனர் எச்சரிக்கை இந்த நிலையில் புத்தாண்டு தொடர்பாக மாநகரகாவல் துணை ஆணையர் சீனி வாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நெல்லை மாநகர் பகுதிகளில் புத்தாண்டு தினத்தை ஒட்டி 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழா காலங்க ளில் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப் படும். புத்தாண்டு அன்று ‘பைக்’ ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி, டிச.27- நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை முற்றிலும் நின்றதால் நீர் வரத்து குறைந்தது. இருந்தபோதும் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைக் குறைத்து நீர் மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தற்போது மீண்டும் நீர் பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணை யின் நீர்மட்டம் திங்களன்று காலை நிலவரப்படி 141.80 அடியாக உள்ளது. நீர்வரத்து 296 கன அடி. திறப்பு 250 கன அடி. நீர் இருப்பு 7612 மி.கன அடியாக உள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் விரைவில் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டும். .அணைப்பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரி கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63.80 அடியாக உள்ளது. வரத்து 570 கன அடி திறப்பு 1769 கன அடி. இருப்பு 4371 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி. வரத்து 80 கன அடி. திறப்பு 30 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 125.95 அடி. வரத்து 24 கன அடி. திறப்பு 27 கன அடி. மழையளவு பெரியாறு-3.8 மி.மீ, தேக்கடி-9.2, கூட லூர்-1.4, சண்முகாநதி அணை-3.4, உத்தமபாளையம்-1.2, போடி-2.4, வைகை அணை- 30.2, மஞ்சளாறு-19, சோத்துப்பாறை-9 பெரியகுளம்-19, வீரபாண்டி-6.2, ஆண்டிபட்டி-13.8, அரண்மனைப்புதூர்-8.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் திங்க ளன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நிலக்கோட்டையில் 32 மி.மீ, திண்டுக்கல்- 26.9, வேடசந்தூர் -26.7, கொடைக்கானல்- 21, சத்திரப்பட்டி- 11.6, நத்தம்-11.5, காமாட்சிபுரம்- 14.8 மி.மீ. என மழை பெய்துள்ளது. மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. வரதமாநதி, நங்காஞ்சியாறு 100 விழுக்காடு, பாலாறு, பொருந்தலாறு, பரப்பலாறு 95 விழுக்காடு, குதிரையாறு 93 விழுக்காடு, குடகனாறு 60 விழுக்காடு நிரம்பியுள்ளன.