districts

img

வெம்பக்கோட்டை அருகே திருமண விழாவில் மணமக்களுக்கு புத்தக சீர்வரிசை

வெம்பக்கோட்டை, மார்ச் 13- விருதுநகர் மாவட்டம் வெம்  பக்கோட்டை அருகே நடை பெற்ற திருமண விழாவில் மண மக்களுக்கு புத்தகங்கள் சீர்வரி சையாக வழங்கப்பட்டன. வெம்பக்கோட்டை அருகே உள்ள எதிர்கோட்டை கிரா மத்தைச் சேர்ந்த சுப்புராஜ்-முத்து லட்சுமி தம்பதியின் மகன் நவ நீதக்கண்ணன். இனாம் மீனாட்சி புரம் பகுதியைச் சேர்ந்த ராமச் சந்திரன்-விஜயலட்சுமி தம்பதி யின் மகள் அனிதா. இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மணமகனின் சொந்த ஊரான எதிர்கோட்டையில் ஞாயிற்றுக் கிழமை காலை நடைபெற்றது.  நவநீதக் கண்ணன் ஏற்க னவே, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து வந்தார். மேலும், புத்தக வாசிப்பிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், இத்திருமண விழாவிற்கு தமுஎகச கௌரவத் தலைவரும் எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன், மாநில செயற் குழு உறுப்பினர் ம.மணிமாறன், பாரதி புத்தகாலய பொறுப்பா ளர் முகமது சிராஜூதீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜீஸ்குமார், மாநில நிர்வாகிகள் பாலச்சந்திர போஸ், செல்வராஜ், மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மணமக்களுக்கு 500க்கும் மேற்பட்ட புத்தகங் களை தாம்பூலத் தட்டில் வைத்து சீர் வரிசையாக கொண்டு வந்த னர். பின்பு, அதை மண மக்க ளுக்கு வழங்கினர். திருமண விழா என்றால், ஏரா ளமான பரிசுப் பொருட்கள் மற் றும் மொய்ப் பணங்களை வழங் கும் இக்காலத்தில் மண மக்க ளுக்கு புத்தகங்களை சீர் வரி சையாக வழங்கியதை அனை வரும் பாராட்டி மகிழ்ந்தனர்.