districts

img

சிவகங்கை: புத்தகத் திருவிழா நிறைவு

சிவகங்கை, ஏப்.25- சிவகங்கை மாவட்ட நிர்வா கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பா ளர்கள் சங்கம் இணைந்து, சிவ கங்கையில் நடத்திய முதல் புத்த கத் திருவிழா திங்கள்கிழமை (ஏப்.25) நிறைவு பெற்றது. சிவகங்கையில் உள்ள மன்  னர் மேல்நிலைப் பள்ளி விளை யாட்டு மைதானத்தில், ஏப்ரல் 15-  ஆம் தேதி தொடங்கி மொத்தம் 11 நாட்கள் காலை 10 முதல் இரவு  10 வரை புத்தகத் திருவிழா நடை பெற்றது. இதில், 100 அரங்குகள் புத்த கக் கண்காட்சிகளுக்கும், 10  அரங்குகள் அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள் ளும் வகையிலும் அமைக்கப் பட்டிருந்தது. இது தவிர, தனி அரங்கில் கீழடி தொல்பொருள் கண்காட்சி இடம்பெற்றது.   இந்நிலையில், திங்கள்கிழ மையுடன் புத்தகத் திருவிழா நிறைவு பெற்றது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அன்பே தவம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  இந்தப் புத்தகத் திருவிழா வில் ஒரு கோடி ரூபாய் மதிப்பி லான புத்தகங்கள் விற்பனை யாகியுள்ளது.