திருவனந்தபுரம், மே 14- இந்தியாவில் மோடியின் செல்வாக்கு மங்கி வருகிறது என்பதை கர்நாடக தேர்தல் நிரூபித்துள்ளது என்றும் நரேந்திர மோடி சாலையில் நடந்து சென்று கையை அசைத் தால் மக்கள் வரிசையில் நின்று வாக்க ளிப்பார்கள் என்கிற பாஜகவின் நம்பிக்கை யை கர்நாடக மக்கள் தகர்த்துள்ளதாகவும் தனது முகநூல் பதிவில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் டாக்டர். தாமஸ் ஐசக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த அவரது முகநூல் பதிவு: கர்நாடக தேர்தலில் நச்சுத்தன்மை வாய்ந்த வகுப்புவாத பிரச்சாரத்தை நடத்திய பாஜக வை புறக்கணித்த கர்நாடக மக்களை நாடே பாராட்டுகிறது. ஹிஜாபிற்கு எதிராக விஷத்தை துப்பிவிட்டு, முஸ்லிம் இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும் என்றும் அறி வித்து, கர்நாடகத்தை செங்குத்தாக பிளவு படுத்தி அரசு நிர்வாகத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிற மாயை தகர்ந்துள் ளது. சமீபத்தில், கேரளா ஸ்டோரி திரைப் படத்தின் மூலம் அதிர்ஷ்டத்தை சோதித்த னர். அமித்ஷாவே கேரளாவை அவதூறா கப் பேசினார். இது எதுவும் செல்லுபடியாக வில்லை. இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். கர்நாட காவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வின் பணப் பையில் விழுவார்களா? இது நடக்காது என்று நாடு நம்புகிறது. இந்தியாவில் மோடியின் செல்வாக்கு மங்கி வருகிறது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது. எவ்வளவு வன்முறை நடத்தினாலும், ஊழல் செய்தாலும், மோடி யை வைத்து நிகழ்ச்சி நடத்தினால், ஓட்டு கள் அனைத்தும், தங்கள் பெட்டியில் விழும் என்பது, பாஜகவின் பெருமையாக இருந் தது. அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. நரேந்திர மோடி சாலையில் நடந்து சென்று கையை அசைத்தால் மக்கள் வரிசையில் நின்று வாக்களிப்பார்கள் என்பது பாஜக வின் நம்பிக்கையாக இருந்தது.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி மாநகராட்சி களை பாஜக இழந்தது. சமீபத்தில் தேர்தல் நடந்த திரிபுரா, நாகா லாந்து மற்றும் மேகாலயாவில் மொத்தம் 180 இடங்கள் உள்ளன. சதவிகித அடிப்ப டையில் பார்த்தால் திரிபுராவில் 39 சத விகித வாக்குகளும், நாகாலாந்தில் 19 சத விகித வாக்குகளும், மேகாலயாவில் 9 சத விகித வாக்குகளும் பாஜக பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வி யடைந்தது. இப்போது கர்நாடகத்திலும். இது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடையாளம். வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி கள் பாஜகவை தோற்கடிக்க முடியும். அந்த நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் அமைந்துள் ளன. வட இந்தியாவும் பாஜகவின் இரும்புக் கோட்டை அல்ல. எதிர்க்கட்சிகள் ஒன்றாக நின்றால் தோற்கடிக்கும் அளவுக்கே பாஜக வுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. பாஜக வுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருக்க எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தகுந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பாஜகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த கர்நாடக மக்க ளுக்கு வணக்கம்.