districts

img

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்வு

திருப்பூர், அக். 14 - அக்டோபர் - 11 சர்வதேச பெண் குழந்தை கள் தினத்தின் 10ஆம் ஆண்டை முன்னிட்டு,  பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. “இது எங்கள் நேரம், எங்கள் உரிமை,  எங்கள் எதிர்காலம்” என்ற கருப்பொருளை  மையமாகக் கொண்டு பெண் குழந்தைகள்  தினத்தை கொண்டாட ஐநா சபை அறிவித்துள் ளது. அதன்படி அக்.11 முதல் 17 ஆம் தேதி  வரை ஒரு வார காலத்திற்கு திருப்பூர் பகுதி களில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கிரா மங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த சமூ ககக்கல்வி மேம்பாட்டு மையம் தீர்மானித் தது.   அதன் ஒரு பகுதியாக வியாழனன்று அவி நாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  அனுப்பர்பாளையம் மாநகராட்சி மேல்நி லைப் பள்ளி, இடுவம்பாளையம் மாநகராட்சி  மேல்நிலைப் பள்ளி, ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைபள்ளி, ராக்கியாபாளை யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி  ஆகியவற்றில், சர்வதேச பெண் குழந்தைகள்  தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கி ணைக்கப்பட்டு பள்ளி குழந்தைகள் உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்வுகளில் மொத்தமாக 1017 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவி நாசி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்  ஆய்வாளர் கீதா மற்றும் உதவி ஆய்வாளர் கள் முருகலட்சுமி மற்றும் வசந்தகுமாரி ஆகி யோர் பங்கேற்று பெண் குழந்தைகளின் பாது காப்பு குறித்து பேசினர். மேலும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், அந்தந்த பள்ளிகளில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி னர். இந்நிகழ்வுகளை சிஎஸ்இடி பணியா ளர்கள் பாஸ்கரன், நைநான், சின்னச்சாமி, கருணாம்பிகை, கதிர்வேல், வரதராஜ் மற்றும்  தனசூர்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.