மதுரை, ஏப்.12- ‘அதிமுக பொதுச்செயலா ளர் எடப்பாடி பழனிசாமி பேசி யுள்ளது ‘நரி ஒரு திராட்சை பழத்தை எட்டிப் பிடிக்க முயன்று விட்டு, பறிக்க முடியாததால் அந்த திராட்சை பழம் புளிக்கிறது’ என்று சொல்வதைப் போல் உள்ளது” என்று பாஜக தலைவர் அண் ணாமலை கூறியிருந்தார்.
இதற்கு முன்னாள் அமைச் சர் செல்லூர் ராஜூவும் கண்ட னம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்ப தாவது:
“ஒரு ஆட்டுக்குட்டி உயர மான சுவற்றில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற சிங்கத்தை பார்த்து, ‘எனக்கு குலை பறித்துப் போடு’ என்று சொன்னதாம். சுவர் என்பது ஆளுங்கட்சி. மத்தி யில் ஆளுங்கட்சி என்ற திமிரில் அண்ணாமலை பேசி வருகிறார். முந்தாநாள் பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை.
உங்கள் அப்பன் இல்ல, யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அரசியலில் கத்துக் குட்டி அண்ணாமலை. அழகிரி யை எதிர்த்து அரசியல் செய்த வன் நான். நீங்கள் எம்மாத்திரம். அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது. அண்ணாமலை படித்து பாஸ் செய்தாரா? இல்லை பிட்டடிச்சு பாஸ் செய்தாரா என தெரியவில்லை.
திராவிட இயக்கம் வளர வேண்டும் என உழைத்த தலை வர்களை இழிவாக பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது. அண்ணாமலையின் நாக்கு வெட்டப்பட வேண்டும். அதிமுக அழிந்து போகும் எனக் கூறும் அண்ணாமலை தான் அழிந்துபோவார். அரசியலில் அட்ரஸ் இல்லாமல் போவார்.”
இவ்வாறு செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.