districts

img

மதுரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

மதுரை, பிப்.1-  கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்க மூடப்பட்டிருந்த பள்ளிகள் பிப்ரவரி 1 செவ் வாய்க்கிழமையன்று திறக்கப்பட் டன. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி களிலும் நேரடி வகுப்புகள் செவ் வாய்க்கிழமையன்று தொடங் கின. இந்நிலையில் மதுரைக்கு வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, ஒத்தக்கடையில் உள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.   ஆய்வின்போது, பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் பயிற்சியில் பங் கேற்ற ஆசிரியர்களிடம் பயிற்சி வகுப்புகள் குறித்துப் பேசினார்.  வகுப்பறைகளுக்குச் சென்ற அமைச்சர் பள்ளி திறப்பு குறித்து மாணவ, மாணவியரிடம் கேட்ட றிந்தார். இதைத்தொடர்ந்து பள் ளிக் கட்டடம் உறுதியாக உள்ளதா என்று ஆசிரியர்களிடம் கேட்ட றிந்தார். இந்நிலையில் பள்ளிக்கு போதிய வகுப்புறைக் கட்டடம் இல்லாததால் கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று ஆசிரியர்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன் வைத்தனர்.