சென்னை, டிச. 22- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் செவ்வாயன்று (டிச. 21) கால மானார். அவருக்கு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் புதனன்று (டிச. 22) அவரது உடலுக்கு கவிஞர் வைரமுத்து, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில அமைச்சர்கள் துரைமுருகன் திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்ட மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் சண்முகநாதன் மறைவிற்கு திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை கிராம மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மயிலாப்பூரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யய்யப்பட்டது.