districts

img

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை விரைவில் நியமித்திடுக! உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை,செப்.3- மதுரை, திருச்சி, விருதுநகர்  அரசு மருத்துவக் கல்லூரி களில் முதல்வர்களை (டீன்)  விரைவில் நியமிக்க வேண்டும்  என்று அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. 

மதுரை, திருச்சி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர்  உள்ளிட்ட தென் மாவட்டங் களில் அரசு மருத்துவ கல்லூரி கள் புதிதாக கட்டப்பட்டன. இந்த மருத்துவக் கல்லூரிகளில் டீனாக பணியாற்றியவர்கள் வயது மூப்பின் காரணமாக பணி  ஓய்வு பெற்றுள்ளனர்.

இந்த கல்லூரிகளில் முத ல்வர்கள் நியமனம் செய்யப்பட வில்லை. இந்நிலையில் மதுரையை சேர்ந்த வெல்விகா மேரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். அவர் தாக்கல் செய்த  மனுவில், தென் தமிழ கத்தில் புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம், எலும்பு மாற்று சிகிச்சை மையம் போன்ற பல்வேறு சிகிச்சைகள் மதுரை மருத்துவக்கல்லூரியில் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த கல்லூரியில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படு கின்றனர். இதே போல மற்ற கல்லூரிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. எனவே தென் மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடங்களை விரைந்து நிரப்ப உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசார ணை நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செப்டம்பர் 3 அன்று நடைபெற்றது. 

அப்போது தமிழக அரசு  தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர் திலக் குமார் ,இந்த கல்லூரி களில் முதல்வர்களை நியமனம் செய்வதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டது. விரைந்து கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் செய்யப் படுவார்கள் என்று தெரிவித்த னர். அப்போது நீதிபதிகள், ஏற்கனவே பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்டது. இன்னும் ஏன் கால தாமதம் செய்தீர்கள். எனவே விரைந்து அந்த  கல்லூரிகளுக்கான முதல்வர் களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த நியமனம் சம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டு வழக்கு விசார ணையை ஒத்திவைத்தனர்.