districts

img

பரமக்குடி வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்திடுக!

இராமநாதபுரம்,டிச.9- பரமக்குடி வைகை ஆற்றில் கடந்த 02.12.2022 சனிக்கிழமை அன்று நள்ளிரவு நடைபெற்ற மணல் கொள்ளையை கண் டித்தும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்க ளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைக்க  வேண்டும்.  திருடப்பட்ட மணலை பறிமுதல் செய்ய வேண்டும்.  பரமக் குடி வைகை ஆற்று கரையோரம் சிசிடிவி கேமிராக்களை பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் டிசம்பர் 8 அன்று காலை   பரமக்குடி வரு வாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மக்கள் நடமாட்டம் மிகுந்த, சித்திரை திருவிழா நடைபெறும் பெருமாள் கோவில் படித்துறை இறக்கத்தில் இயந்திரங்களை பயன்படுத்தி மணல் திருடியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் இதன் பின்னணியில் இருந்து செயல்பட்ட கும்பலையும் கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பரமக்குடி தாலுகா செயலா ளர் தி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் என்.எஸ்.பெருமாள், வழக்கறிஞர் பசுமலை, மறத்தமிழர் சேனை நிறுவன தலைவர் சு.புதுமலர் பிரபாகரன், வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மதுரைவீரன், தென் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ம.பாலமுரளி, மதிமுக நகர்ச் செயலாளர் சடாச்சரம், பொதுக்குழு உறுப்பினர் பழ. சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் நகர்ச்  செயலாளர் சரவண பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, ஊழல் தடுப்பு இயக்கம் அருள் செலின் மேரி, தமிழ்ப்புலிகள் மாவட்ட செய லாளர் ராஜா, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் என்.கே.ராஜன்,  நாம் தமிழர் கட்சி காமராஜ் ஆகியோர் பேசினர்.