தேனி, மார்ச் 9- இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அக்குபங்சர் ஆய்வு இருக்கை அமைவதற்கு ரூ.1 கோடி நிதியை அக்குபங்சர் ஹீலர்கள் கூட்ட மைப்பு (இந்தியா)வின் பொதுச்செயலாளர் அக்கு ஹீலர். அ.உமர் பாரூக் வழங்கி னார். அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு (இந்தியா) தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்கி, இந்தி யாவின் முதல் அக்குபங்சர் ஆய்விருக்கை யை உருவாக்குகிறது. அக்குபங்சர் ஆய் வுப் பணிகள், கல்விப் பணி, பரவலாக்கம் போன்ற நோக்கங்களுக்காக தமிழ்ப் பல்க லைக்கழகத்தின் மெய்யியல் துறையில் அக்குபங்சர் ஆய்வு இருக்கை அமைக் கப்பட உள்ளது. ஆய்வு இருக்கை நிதி ரூ.1 கோடிக்கான காசோலையை புதனன்று அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு (இந்தியா)வின் பொதுச்செயலாளர் அக்கு ஹீலர். அ.உமர் பாரூக் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு வள்ளுவனிடம் வழங்கினார். அப்போது பல்கலை,. பதிவாளர், மெய்யியல் துறைத் தலைவர் மற்றும் ஹீலர்கள் கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் அக்கு ஹீலர் ப.தி.ராஜேந்திரன் ஆகியோர் உட னிருந்தனர்.