districts

img

கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் பழனி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக!

பழனி, ஆக.24- தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி பழனிக்கு வியாழனன்று (ஆக.24) வருகை தந்தார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ அணி சார் பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் வியாழனன்று (ஆக.24) நடைபெற்றது.  போராட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஆர்.சச்சிதானந்தம், பழனி நகர மன்ற  துணைத் தலைவர் கே.கந்தசாமி, விசிக  மேற்கு மாவட்டச் செயலாளர் திருவளவன், விசிக நகர செயலாளர் மணவாளன், செய்தி  தொடர்பாளர் பொதினிவளவன், பழனி நகர  மன்ற முன்னாள் தலைவர் வி.ராஜமாணிக் கம், கே.அருள்செல்வன், எம்.ராமசாமி, எஸ். கமலக்கண்ணன், பி.செல்வராஜ், என்.கனகு,  காங்கிரஸ் நகர தலைவர் முத்து விஜயன், மதிமுக ஒன்றியச் செயலாளர் செல்வம், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் அஜ்மல் கான், நகரத் தலைவர் முகமது யாசின் ஆகி யோர் தலைமையில் ஏராளமானோர் பங் கேற்றனர்.  இந்நிலையில், பாஜக மேற்கு மாவட்டத்  தலைவர் கனகராஜ் தலைமையில் பாஜக வினர் ஆளுநருக்கு வரவேற்பு அளிப்பதாகக்  கூறி போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அச்சமூட்  டும் வகையிலும் கோஷங்களை எழுப்பினர்.  இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக் கையில், ‘‘ஆளுநர் ஆர்.என்.ரவியின் பழனி  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ அணி சார்பில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்  கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அதே இடத்தில் பாஜகவினர் ஆளுநருக்கு வர வேற்பு அளிக்க கூடினர். பாஜகவினர் வர வேற்பு அளிக்க வேண்டும் என்றால் வேறு இடத்திற்கு சென்று வரவேற்பளிக்கலாம். ஆனால், ‘இந்தியா’ அணி ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தில் வந்து பாஜகவினர் கல வரத்தை தூண்டுகின்றனர்.  ‘இந்தியா’ அணியினரை ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் தடுப்பதற்கு பெரும் முயற்சி  எடுத்த பழனி நகர காவல் ஆய்வாளர் உதய குமார், பாஜகவினரை அப்புறப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் வரவேற்பு அளிப்பதற்கு அனுமதி அளித்தது அவர்தான் எனவும் சொல்லப்படுகிறது.  தமிழ்நாடு முழுவதும் ஆளுநரின் வரு கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங் கள் அமைதியாக நடந்துள்ளன. ஆனால் பழனி நகரத்தில் காவல் ஆய்வாளர் உதய குமார் பாஜகவினரை தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாக உள்ளார்.  மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய ‘இந்தியா’ அணியின ரையே காவல்துறையினர் கைது செய்தனர். அதேவேளையில், பாஜகவினரை கலைந்து  போகச் சொன்ன பழனி காவல் துணை  கண்காணிப்பாளர் சரவணனை பாஜகவினர்  தாக்கினர். காவல் துணை கண்காணிப்பாளர்  தாக்கப்பட்ட போது, தொடர்ந்து பாஜகவின ருக்கு ஆதரவாக செயல்படும் பழனி நகர  காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமறை வாகி விட்டார்.  இதை வன்மையாக கண்டிக்கிறோம். பழனி காவல்துறை துணை கண்காணிப்பா ளரை தாக்கிய பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்டவர்களை கைது செய்வ தோடு பழனி நகர காவல் ஆய்வாளர் உதய குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.