districts

img

அனுமதியின்றி ஆவின் பெயரை பயன்படுத்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருவில்லிபுத்தூர், ஜூலை 21-  திருவில்லிபுத்தூரில் பல்வேறு தனியார் பால்கோவா நிறுவனங்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ‘ஆவின் விருது நகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், தமிழ்நாடு அரசு’ என்று அரசு நிறுவனங்களின் பெயர்களை முறையாக அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வந்தன. இந்நிலையில் தற்போது அனுமதி இல்லாமல் இயங்கி வந்த நிறுவனங்கள் குறித்து  ஆவின் நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.  இதையடுத்து விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் ஆவின் நிர்வாக விற்பனை மேலாளர் ராகுல் தலைமை யில் திருவில்லிபுத்தூர் தேரடி மற்றும் கீழ ரத வீதியில் அனுமதி இன்றி அரசின் பெயர்களை வைத்த நிறுவன  போர்டுகளை அகற்றினர்.  மேலும் இனிமேல் இந்த மாதிரி போர்டுகளை வைக்கக்  கூடாது. போர்டுகள் வைக்க வேண்டும் என்றால் முறை யாக நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். மீறி அனு மதி இல்லாமல் போர்டு வைத்தால் சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர் .போர்டுகளை அகற்றும் பணியின்போது தனியார் நிறு வனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவின் நிர்வா கம் மற்றும் நகராட்சி ஊழியர்களோடு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு நிறுவனத்தில் அரசு ஊழி யர்களை கடுமையான சொற்களால் திட்டி, தாக்கவும் முற்பட்டனர்.