districts

சு.வெங்கடேசன் எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்க அறிவிப்பு

மதுரை, ஜூன் 10-  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன்  கோரிக்கையை ஏற்று  வைகாசி விசாகத்தன்று மதுரை யிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில்  இயக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது.  வைகாசி விசாகத்திற்கு திருச் செந்தூர், பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் வேண்டுகோள் விடுத்துள் ளார்.  ஜூன் 12 அன்று வைகாசி விசாகத்  திருவிழா. அன்றைய தினம் திருச் செந்தூர், பழனி ஆகிய முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆண்டுதோறும் நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் பயணம் செய்வார்கள். அன்றாட பயணி வண்டிகளில் கோடைகாலம் ஆத லால் இடம் போதாது. எனவே சிறப்பு  ரயில்களை ஒரு வாரம் இயக்கிட வேண்டும் என்று வலியுறுத்தி தெற்கு  ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம் எழுதி னார்.  இதனைத்தொடர்ந்து சு.வெங்க டேசன் எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., கூறுகையில், எனது கோரிக் கையை ஏற்று வைகாசி விசாகத் திற்கு சிறப்பு ரயில் இயக்க உத்தர விட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி.   வைகாசி விசாகத்தினை முன்னிட்டு (ஜூன்-12) பழனி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்கிட வேண் டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதி இருந் தேன். அது உடனடியாக பரிசீலிக்கப் பட்டு வெற்றியடைந்துள்ளது. வைகாசி விசாகத்தன்று (ஜூன் 12)  காலை மதுரையில் இருந்து பழ னிக்கும் , மாலை பழனியில் இருந்து மதுரைக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.