தேனி, பிப்.22- தேனி மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாநிலக்குழு உறுப்பி னர் டி.வெங்கடேசன் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரியகுளம் நக ராட்சி 13 வது வார்டு கவுன்சிலர் எம்.மதன்குமார் ,பண்ணைப்புரம் பேரூராட்சி 15 வது வார்டு கவுன் சிலர் எஸ்.சுருளிவேல் ,காமய கவுண்டன்பட்டி பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் எஸ்.பன்னீர்வேல் ,ஆண்டிபட்டி பேரூ ராட்சி 17 வது வார்டு கவுன்சிலர் வி.சின்னன், க.புதுப்பட்டி பேரூ ராட்சி 1வது வார்டு கவுன்சிலர் எம்.பிரதீபா ஆகியோரை நேரில் சந்தித்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் ,மாநிலக்குழு உறுப்பி னர் டி.வெங்கடேசன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த னர். மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.முனீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.