districts

img

ஒட்டன்சத்திரம் அருகே தனியார் கேபிள் பதிக்கும் பணியால் சாலையோரம் குவிந்துள்ள மண்

விபத்து நிகழும் அபாயம்  ஒட்டன்சத்திரம், பிப்.24-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குத்திலிப்பையில் இருந்து வேடசந்தூர் வரை தனியார் நிறுவனத்தின் செல்போன் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இதில் ஒட்டன்சத்திரம் - வேடசந்தூர் நெடுஞ்சாலை யில் கேதையறும்பு முதல்  நவாமரத்துப்பட்டி வரை தற்  போது கேபிள் பதிப்பதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் மண், சாலை யோரம் குவித்து வைக்கப் படுகிறது. இதனால் இரவு நேரங்க ளில் இரு சக்கர வாகனங்க ளில் வருபவர்கள் சாலையோ ரம் மண் கொட்டப்பட்டது தெரியாமல் கீழே விழுந்து  காயங்களுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படு கிறது. பணி நடைபெறும் இடங்களில் இருளில் ஒளி ரும் எச்சரிக்கை பலகை  அமைத்து பணி நடைபெற் றால் பெரும் விபத்துக்கள் ஏற்படாமல் குறைய வாய்ப்பு உண்டு. எனவே எச்சரிக்கை பலகை அமைத்து பணி நடை பெறுவதற்கு தனியார்  கேபிள் நிறுவனம் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலி யுறுத்தியுள்ளனர்.