districts

img

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம்

திருநெல்வேலி, ஜூலை 8- ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தக் கோரியும் தனியார்மய நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும், பொது போக்கு வரத்தை பலப்படுத்திட வேண்டும், ஓய்வு  பெற்ற ஊழியர்களின் ஓய்வு கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு பெற்றிடவும் ,பேட்டா இன்செண்டிவ்  பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி யும் வெள்ளிக்கிழமை அன்று வண்ணாரப் பேட்டை பொது மேலாளர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜோதி துவக்கி வைத்தார். சிஐடியு மாநில குழு  உறுப்பினர் பெருமாள் வாழ்த்தி பேசினார். ரேவா பொதுச்செயலா ளர் முத்துகிருஷ்ணன், ரேவா தலைவர் தாணு மூர்த்தி, துணை தலைவர் மரிய ஜான் ரோஸ், துணைத் தலைவர் மணி ,வன்னிய பெருமாள், துணை பொதுச்செயலாளர்கள் சிவகுமார், பாலசுப்பிரமணியன், அமல் ராஜ், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க சம்மேளன  குழு உறுப்பினர்  சுதர் சிங், துணைப் பொதுச் செயலாளர் அருண் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  டிஎன்எஸ்டிசி மண்டல தலைவர் அழகர்சாமி நிறைவு உரையாற்றி னார். சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொருளாளர் குமரன் நன்றி கூறி னார். நாகர்கோவில் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் விரைவு போக்கு வரத்து கழக நாகர்கோவில் பணிமனை முன்பு நடைபெற்றது. வாயிற் கூட்டத்திற்கு பணிமனை செயலாளர் பொன் குமார் தலைமை வகித்தார் பணிமனை உதவிச் செயலாளர் பகவதி அப்பன், மத்திய சங்க உதவித் தலைவர் ஜான் ராஜன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பொன்.சோபன ராஜ் விளக்கவுரை ஆக்கினர் வாயிற் கூட்டத்தில் ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட தலைவர் பால்ராஜ், கிருஷ்ண தாஸ்,வின்சென்ட், ராஜமார்த்தாண்டன் மற்றும் முருகன், ராதாகிருஷ்ணன், சேகர், மனோகரன் உட்பட பலர் பங்கெடுத்தனர்.

நாகர்கோவில்

சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் விரைவு போக்கு வரத்து கழக நாகர்கோவில் பணிமனை முன்பு நடைபெற்றது. வாயிற் கூட்டத்திற்கு பணிமனை செயலாளர் பொன் குமார் தலைமை வகித்தார் பணிமனை உதவிச் செயலாளர் பகவதி அப்பன், மத்திய சங்க உதவித் தலைவர் ஜான் ராஜன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பொன்.சோபன ராஜ் விளக்கவுரை ஆக்கினர் வாயிற் கூட்டத்தில் ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட தலைவர் பால்ராஜ், கிருஷ்ண தாஸ்,வின்சென்ட், ராஜமார்த்தாண்டன் மற்றும் முருகன், ராதாகிருஷ்ணன், சேகர், மனோகரன் உட்பட பலர் பங்கெடுத்தனர்.