districts

img

தில்லையாடி பெரிய வாய்க்கால் ரூ.21 லட்சம் செலவில் 22 கிலோமீட்டர் தூரம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராம ஊராட்சியில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தில்லையாடி பெரிய வாய்க்கால் ரூ.21 லட்சம் செலவில் 22 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி புதனன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் விஜயபாஸ்கர், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர், உழவர் குழுவினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.