சிவகாசி அருகே ஒரே நாளில் 3 இரு சக்கர வாகனங்கள் மாயம்
சிவகாசி, அக்.6- சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் வழக்கம் போல இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்பு, மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. எனவே, இதுகுறித்து திருத்தங்கல் காவல்நிலை யத்தில் குருமூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் திருத்தங்கல் அக்ரகாரத் தெருவைச் சேர்ந்த ராமர் (42) என்பவரது இரு சக்கர வாகனமும், ஆலமரத்துப் பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (55) என்பவரின் இரு சக்கர வாகனமும் திருடு போயுள்ளது. இதுகுறித்தும் திருத்தங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வாகனத்தை தேடி வருகின்றனர்.
தனியார் அட்டை மில்லில் தீ விபத்து
சிவகாசி, அக்.6- சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவார்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான அட்டை தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. ஆலை வளாகத்தில் அட்டை தயாரிக்கத் தேவையான பழைய காகிதங்கள் கட்டு, கட்டுக்காக டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டி ருந்தன. இந்நிலையில், வெள்ளியன்று அதிகாலை திடீரென காகித கட்டுகளில் தீப்பற்றி எரியத் துவங்கியது. இதை யடுத்து, ஆலையில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், போதிய பலன் கிட்டவில்லை. இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்பு, அதி நவீன வாட்டர் பவுன்சர் வாகனம் மற்றும் விருதுநகர் தீயணைப்பு நிலையத்திலிருந்து கூடுதல் வாகனங்களும், தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். சுமார் 4 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காகித கட்டுகள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தங்கல் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு : ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு
சிவகாசி, அக்.6- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விதிமுறைகளை மீறி மரத்தடியில் பட்டாசு தயார் செய்யப்பட்டது. எனவே, ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திருத்தங்கல் அருகே நமஸ்கரித்தான் பட்டி தனியா ருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விதிமுறைகளை மீறி மரத்தடியிலும், பொருட்கள் வைக்கும் இடங்களிலும் பட்டாசு தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. எனவே, ஆலை உரிமையாளர் முத்துராஜ் (53), லீசுக்கு எடுத்த ராஜ்குமார் (45) மற்றும் போர்மேன் தர்மராஜ் (46) ஆகியோர் மீது திருத்தங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மானியத்துடன் கூடிய பில்டர் காபி நிலையம் அமைக்க கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் இராமநாதபுரம் ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம், அக்.6- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். தொழில் தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதி திராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியின ருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம்.
ஆவின் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி கூட்டுறவு ஊழியர்கள் மனு
மதுரை, அக்.6- பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க செயலாட்சியர்க ளுக்கான பயிற்சி வகுப்பினை துவக்கி வைப்பதற்காக பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் வளாகத்திற்கு வெள்ளியன்று வருகை தந்தார். இந்நிலையில், மதுரை மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் இரா.லெனின், மாவட்டத் தலைவர் துரைச் சாமி உள்ளிட்டோர் அமைச் சரை நேரில் சந்தித்தனர். அப்போது, மதுரை ஆவின் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை களான 240 நாள் ஈட்டிய விடுப்பு, நிறுத்தி வைக்கப் பட்டுள்ள 4 சதவீதம் அக விலைப்படி, ஒப்பந்த தொழி லாளர்களுடைய பிரச்சனை கள், நிலுவையில் உள்ள தர ஊதியம், ஆவின் ஊழியர் சிக்கன நாணய சங்கத்தில் தவறு ஏதும் செய்யாத ஊழி யர்கள் மீதான பழிவாங்கும் நட வடிக்கையை கைவிட கோரு தல் உள்ளிட்ட கோரிக்கைக ளும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் இதுகுறித்து நடவ டிக்கை எடுக்க பரிந்துரைப்ப தாக உறுதி அளித்தார்.
சாலையோர வியாபாரிகள் வங்கிகளில் கடன் பெறும் முகாமிற்கான வழிகாட்டு முறைகள் மதுரை மாவட்ட முன்னோடி வங்கி அறிவிப்பு
மதுரை, அக்.5- மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலை யோர வியாபாரிகள் பயன் பெறும் வகையில் வங்கி கள் மூலம் கடனுதவி வழங் கும் திட்டத்தை அறிவித் துள்ளது. இதற்கான வழி காட்டு நெறி முறைகளை வங்கிகளுக்கு மதுரை மாவட்ட முன்னோடி வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, அண்ணாநகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மையம் கிளை, தல்லா குளம் இந்தியன் வங்கி கிளை, கிராண்ட் சென்ட்ரல் கனரா வங்கி கிளை, விநாயக நகர் பாரத ஸ்டேட் வங்கி கிளை ஆகிய மைய ங்களில் பயனாளிகளின் ஆவணங்களை பூர்த்தி செய்ய அக்டோபர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 2 பேர் கொண்ட சிறப்பு கவுண்ட்டரை ஏற்பாடு செய்யுமாறு அந்த ந்த வங்கிகளுக்கு மாவட்ட முதன்மை வங்கி வேண்டு கோள் விடுத்துள்ளது. மேலும் அக்டோபர் 9 அன்று நடைபெறும் மெகா முகாமில் தேர்வு செய்யப் படும் வங்கியின் பயனாளி களை நேரடியாக இந்த மையங்களுக்கு சென்று சேருமாறு சம்பந்தப்பட்ட வர்களுக்கு அறிவுறுத்து மாறு மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, பயனாளிகள் அந்தந்த மையங்களுக்கு தங்களது வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அசல் & நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 பிரதிகள், தெரு விற்பனையாளர் அடையாள அட்டை அல்லது தகுதிவாய்ந்த அதி காரியிடமிருந்து பரிந்துரை கடிதம் ஆகிய ஆவணங்க ளை எடுத்துச் செல்ல அறி வுறுத்தப்படுகிறார்கள்.