2022 மே 1, இரவு 11.41, மதுரையிலிருந்து வந்த செய்தி. தலையில் இடியிறங்கியது போலிருந்தது. மீளவே சில நிமிடங்களாகிவிட்டது. தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவுச் செய்தியை மனம் ஏற்கவே இல்லை. எளிமையான தோற்றம். வசீகரிக்கும் சிரிப்பு. யாரைப் பார்த்தாலும் பேர் சொல்லி அழைக்கும் போதே இழுத்துக் கொள்ளும் காந்தக்குரல். இனி அந்தக் குரல் எப்போது கேட்கும்? இசையில் அதிக ஆர்வம் உள்ளவர் மட்டுமல்ல, வயலின் வாசிப்பதிலும் அலாதி பிரியம் கொண்ட வர். புல்லாங்குழல் அவரின் சோல்னா பையில் நீண்ட நாள் துணையிருந்தது. திருச்சுழி தாலுகாவில் விவசாயத்தில் செழித்த கிராமங்களில் ம.ரெட்டியப்பட்டியும் ஒன்று. கல்வி யிலும் மேலோங்கி இருந்ததால் வீட்டிற்கு ஒருவரா வது அரசுப் பணியில் இருந்தார்கள். செழிப்பான குடும்பமான (எம்) மீனாட்சி குடும்பத்தின் (என்) நல்லசுப்புவின் மகன் (எஸ்) சுப்பா ரெட்டியார் - சுப்புலட்சுமி அம்மாளின் 2ஆவது மகன் தான் வெங்கட்டராமன்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மண்ணியல் (Geology) முதலாம் ஆண்டு படிக்கும் போது உடல்நலம் குன்றியதால் படிப்பைத் தொடர முடிய வில்லை. ம.ரெட்டியபட்டிக்கு வேறு பணிக்காக சென்றிருந்த தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர் களோடு அறிமுகம் ஏற்பட்டு அவரது அரவணைப்பி னால் ஊழியரானார். பின்பு அருப்புக்கோட்டை தாலுகா குழு உறுப்பினர் தாலுகா செயலாளர், விவ சாய சங்க மாவட்டச் செயலாளர், கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர் என தனது அயராத பணியின் மூலம் உயர்ந்தார். ஒன்றுபட்ட அருப்புக்கோட்டை (தாலுகாவில் தற்போதைய காரியாபட்டி - திருச்சுழி தாலுகா உள்பட கட்சிப் பணியை சிறப்புற மேற்கொண்ட வர். தோழர்கள் முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி, அண்ணாத்துரை, இடிமுழக்கம் மகாதேவர், ராம தாஸ், கருப்பணன், மூர்த்தி, சுப்புராஜ், காரியா பட்டி பகுதியில் ப.ப.இருளன், ஆறுமுகம், எஸ்.கே. ராஜேந்திரன் சேவுகன், இரத்தினசாமி, முத்தையா, பால்சாமி, பாலவநத்தம் கிருஷ்ணசாமி என செல்வாக்கு மிக்க தலைவர்களோடு இணைந்தும், உருவாக்கியும் பணிகளை ஒருங்கிணைத்தவர். வீட்டில் விவசாய பொருட்கள் வாங்க கொடுக்கும் பணம்,
நோட்டீஸாக, போஸ்டராக, கட்சிப் பணிக் கானதாக மாறும். ஒரு கட்டத்தில் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். அருப்புக்கோட்டை கிராமங்களின் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தி பல கிராமங்களை கட்சியின் செல்வாக்குமிக்க கிராமங்களாக மாற்றி னர். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கட்சி உறுப்பினர்களின் கடும் உழைப்பும், மேற்சொன்ன தலைவர்களின் பகுதிகளில் தங்கிப் பணியாற்றியதும் கட்சி ஸ்பானத்தின் வலு வும்தான். ஜெயவிலாஸ் மில்லில் சங்கம் அமைத்த தற்காக தோழர் சுப்புராஜ் உட்பட பலர் பழி வாங்கப்பட்டனர். கூட்டங்கள் நடத்திய இடமான தோழர் டாக்டர் கருப்பணனின் மருத்துவமனை தாக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக மாவட்டம் முழுவதும் தோழர்களை திரட்டி ஊர்வலம் நடைபெற்றது. காவல்துறையை பயன்படுத்தி எம்.என்.எஸ்., அண்ணாத்துரை, இருளன், ராம நாதன், சுப்புராஜ், மகாதேவன், சீசர், பிச்சை, ராசு ஆகிய ஒன்பது தோழர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது, ஒரு மாதத்திற்கும் மேலாக எம்என்எஸ், அண்ணாத்துரை உட்பட சிறையில் அடைக்கப்பட்டனர். மல்லாங்கிணறு அய்யனார் மில்லின் போராட்டங்களில் வழி காட்டியவர். மூட்டா அமைப்பு ஆரம்பித்ததற்காக பேராசிரியர்கள் மிரட்டப்பட்ட போதும், நூலகர் ராமச்சந்திரன் தாக்கப்பட்ட போதும் உடன் நின்று போராடியவர்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மண்ணியல் (Geology) முதலாம் ஆண்டு படிக்கும் போது உடல்நலம் குன்றியதால் படிப்பைத் தொடர முடிய வில்லை. ம.ரெட்டியபட்டிக்கு வேறு பணிக்காக சென்றிருந்த தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர் களோடு அறிமுகம் ஏற்பட்டு அவரது அரவணைப்பி னால் ஊழியரானார். பின்பு அருப்புக்கோட்டை தாலுகா குழு உறுப்பினர் தாலுகா செயலாளர், விவ சாய சங்க மாவட்டச் செயலாளர், கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர் என தனது அயராத பணியின் மூலம் உயர்ந்தார். ஒன்றுபட்ட அருப்புக்கோட்டை (தாலுகாவில் தற்போதைய காரியாபட்டி - திருச்சுழி தாலுகா உள்பட கட்சிப் பணியை சிறப்புற மேற்கொண்ட வர். தோழர்கள் முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி, அண்ணாத்துரை, இடிமுழக்கம் மகாதேவர், ராம தாஸ், கருப்பணன், மூர்த்தி, சுப்புராஜ், காரியா பட்டி பகுதியில் ப.ப.இருளன், ஆறுமுகம், எஸ்.கே. ராஜேந்திரன் சேவுகன், இரத்தினசாமி, முத்தையா, பால்சாமி, பாலவநத்தம் கிருஷ்ணசாமி என செல்வாக்கு மிக்க தலைவர்களோடு இணைந்தும், உருவாக்கியும் பணிகளை ஒருங்கிணைத்தவர். வீட்டில் விவசாய பொருட்கள் வாங்க கொடுக்கும் பணம், நோட்டீஸாக, போஸ்டராக, கட்சிப் பணிக் கானதாக மாறும். ஒரு கட்டத்தில் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். அருப்புக்கோட்டை கிராமங்களின் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தி பல கிராமங்களை கட்சியின் செல்வாக்குமிக்க கிராமங்களாக மாற்றி னர். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கட்சி உறுப்பினர்களின் கடும் உழைப்பும், மேற்சொன்ன தலைவர்களின் பகுதிகளில் தங்கிப் பணியாற்றியதும் கட்சி ஸ்பானத்தின் வலு வும்தான். ஜெயவிலாஸ் மில்லில் சங்கம் அமைத்த தற்காக தோழர் சுப்புராஜ் உட்பட பலர் பழி வாங்கப்பட்டனர். கூட்டங்கள் நடத்திய இடமான தோழர் டாக்டர் கருப்பணனின் மருத்துவமனை தாக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக மாவட்டம் முழுவதும் தோழர்களை திரட்டி ஊர்வலம் நடைபெற்றது. காவல்துறையை பயன்படுத்தி எம்.என்.எஸ்., அண்ணாத்துரை, இருளன், ராம நாதன், சுப்புராஜ், மகாதேவன், சீசர், பிச்சை, ராசு ஆகிய ஒன்பது தோழர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது, ஒரு மாதத்திற்கும் மேலாக எம்என்எஸ், அண்ணாத்துரை உட்பட சிறையில் அடைக்கப்பட்டனர். மல்லாங்கிணறு அய்யனார் மில்லின் போராட்டங்களில் வழி காட்டியவர். மூட்டா அமைப்பு ஆரம்பித்ததற்காக பேராசிரியர்கள் மிரட்டப்பட்ட போதும், நூலகர் ராமச்சந்திரன் தாக்கப்பட்ட போதும் உடன் நின்று போராடியவர்.
தோழர் எஸ்.ஏ.பி.யின் உருவாக்கமும், எம்.என்.எஸ்.சின் கோட்பாடுகளில் நின்று செயல்பட வைத்ததும் விருதுநகர் மாவட்டம் மாநில கட்சி யின் அமைப்புகளுக்கு பல தலைவர்களை உரு வாக்கியது என்றால் மிகையல்ல. ஏற்றுக்கொண்ட பணிகளை, தேர்வு செய்யப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்து வார். ஒப்புக்கொண்ட தேதிகளில் தவறாமல் பங்கேற்பார். தோழர் பிரகாஷ் காரத் கூறியது போல் ‘தன்னி கரற்ற தலைவர்’ அவர். “மனிதன் பயனின்றி அழி யக்கூடாது” என்ற வரிகளுக்கு தன்னலமற்ற சேவை யின் மூலம் பட்டை தீட்டியவர். அவர் காட்டிய வழியில் லட்சியப் பதாகையை மேலும் முன்னெ டுத்து செல்வதுதான் அவருக்கு செலுத்தும் அஞ்சலி. செவ்வணக்கம் தோழர் எம்என்எஸ்!