தூத்துக்குடி, பிப்.6- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி, கோவில் பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய 3 நகராட்சிகள், 18 பேரூராட்சி களில் உள்ள 414 வார்டு உறுப்பி னர்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கி றது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி முதல் வெள்ளிக் கிழமை வரை நடந்தது. இதில் மாவட் டம் முழுவதும் 2 ஆயிரத்து 276 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாநக ராட்சியில் மட்டும் 480 மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. மாவட்டத்தில் 22 இடங் களில் அந்தந்த உதவி தேர்தல் நடத் தும் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரி சீலனை நடந்தது. காலை முதல் ஒவ் வொரு வார்டாக வேட்பாளர்கள் அழைக்கப்பட்டனர். பின்னர் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அந்த மனுக்கள் மீது ஏதேனும் ஆட்சேபணை கள் உள்ளதா என்று கேட்கப்பட்டது. அப்போது 59-வது வார்டில் அதி முக சார்பில் போட்டியிடும் அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முக நாதன் மகன் எஸ்.பி.எஸ்.ராஜாவுக்கு மாநகராட்சி பகுதியில் ஓட்டு இல்லை என்று ஆட்சேபணை தெரிவிக்கப் பட்டது. ஆனால் அதற்கான ஆவணங் களை வேட்பாளர் தரப்பில் சமர்ப் பித்ததால், அவரது மனு ஏற்கப்பட்டது. அதே போன்று 60-வது வார்டு திமுக வேட்பாளர் பாலகுருசாமி, மாநக ராட்சியில் வக்கீலாக இருப்பதாகவும், அந்த பதவியை ராஜினாமா செய்ய வில்லை என்றும் அ.தி.மு.க.வினர் ஆட்சேபணை தெரிவித்தனர். இத னால் உதவி தேர்தல் நடத்தும் அலு வலர் ராமச்சந்திரன், தி.மு.க. வேட்பா ளரின் மனுவை ஏற்காமல் உரிய ஆவ ணங்களை தாக்கல் செய்ய அறி வுறுத்தி நிறுத்தி வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
475 மனுக்கள் ஏற்பு
17-வது வார்டு மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் திருமணிக்கு மாநகராட்சி பகுதியில் ஓட்டு இல்லை. இதனால் அதற்கு உரிய ஆவணத்தை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, அவரது வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப் பட்டது. மாலையில் 60-வது வார்டு திமுக வேட்பாளர் பாலகுருசாமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் திருமணியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தவிர 4 வேட்பாளர்கள் 2 மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த 4 மனுக் களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதம் உள்ள 475 மனுக்கள் ஏற்கப் பட்டன.
கோவில்பட்டி நகராட்சி
கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டு உறுப்பினா் பதவிகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட 276 வேட்பு மனுக்களில் 274 மனுக்கள் ஏற்கப்பட் டன; 2 சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நகராட்சியில் வார்டு உறுப்பி னர் பதவிகளுக்கு திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, தமாகா, தேமுதிக, சமக, கம்யூனிஸ்ட் கட்சி கள், பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமி ழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி யினர், சுயேச்சைகள் என மொத்தம் 276 வேட்புமனுக்கள் தாக்கல் செய் யப்பட்டன. அவற்றின் மீதான பரி சீலனை நடைபெற்றது. இதில், 274 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 9ஆவது வார்டில் மாரீஸ்வரி, 11ஆவது வார்டில் கணேசன் ஆகிய 2 சுயேச் சைகளின் மனுக்கள் போதிய ஆவ ணங்கள் இல்லை எனக் கூறி தள்ளு படி செய்யப்பட்டன.
கழுகுமலை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 78 போ் மனுதாக்கல் செய்திருந்தனர். பரிசீலனையில் 77 மனுக்கள் ஏற்கப்பட்டன. 5ஆவது வார்டில் மனுதாக்கல் செய்த அதிமுக வின் மாற்று வேட்பாளர் மாடசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 15 வார்டுகள் கொண்ட கயத்தாறு பேரூ ராட்சியில் 86 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 85 மனுக்கள் ஏற்கப்பட்டன. 1ஆவது வார்டில் மனுதாக்கல் செய்த ராதாகிருஷ்ணனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நகராட்சி - பேரூராட்சிகளில்... நகராட்சிகளில் தாக்கல் செய்யப் பட்ட 542 மனுக்களில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற 529 மனுக்கள் ஏற்கப்பட்டன. பேரூ ராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட 1,254 மனுக்களில் 30 மனுக்கள் தள்ளு படி செய்யப்பட்டன. மற்ற 1224 மனுக்கள் ஏற்கப்பட்டன. மாவட்டத் தில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 276 மனுக்களில் 48 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதம் உள்ள 2 ஆயிரத்து 228 மனுக் கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி கணேஷ், மணியாச்சி டிஎஸ்பி சங்கர், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், மத்திய பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த னர். இந்த பணிகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.