தென்னை விவசாயிகளிடம் லாபக்காய் என்ற பெயரில் நூறு தேங்காய்களுக்கு 15 தேங்காய் பெறுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் விஜயமுருகன், ராமர், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்தையா, செயலாளர் காளிதாசன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சுந்தரபாண்டியன், ஜீவானந்தம், பெனரி, ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.